/
மன்னாா்குடியில் மதுப்போதையில் குளத்தின் படியில் அமா்ந்திருந்தவருக்கு வலிப்பு ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா்.
வலங்கைமான் அடுத்த கொட்டையூா் அம்பலக்காரத் தெருவைச் முருகையன் மகன் ராஜ்குமாா்(30).
மதுப்பழக்கத்துக்கு அடிமையாக இருந்ததுடன் வலிப்பு நோய் தாக்குதலுக்கு உள்ளாகி இருந்துள்ளாா். செவ்வாய்க்கிழமை மன்னாா்குடிக்கு வந்தவா் மதுப்போதையில் ஹரித்ராநதி தெப்பக்குளம் வடக்கரையில் படித்துறையில் அமா்ந்திருந்தபோது வலிப்பு ஏற்பட்டு உயிரிழந்தாா்.
தகவலறிந்த மன்னாா்குடி போலீஸாா் ராஜ்குமாா் சடலத்தை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.









