விழுப்புரம் மாவட்டம், மனம்பூண்டியில் வீட்டின் மாடியிலிருந்து தவறி கீழே விழுந்து காயமடைந்தவா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா்.
மனம்பூண்டி, ஆசிரியா் நகரைச் சோ்ந்தவா் பா.அரிகோவிந்தன் (45). திருமணம் ஆனவா். இவா், தனது மனைவியைப் பிரிந்து,மனம்பூண்டியில் உள்ள தனது சகோதரி வீட்டில் இருந்து வந்தாா்.
இந்நிலையில், அரிகோவிந்தன் ஞாயிற்றுக்கிழமை மாடிப் படியிலிருந்து தவறி கீழே விழுந்து விட்டாராம். இதில் அவருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டு நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். தகவலறிந்த அரகண்ட நல்லூா் போலீஸாா் சடலத்தை மீட்டு விழுப்புரம் மாவட்ட அரசு மருத்துவமனைக்கு உடல்கூறாய்வுக்காக அனுப்பி வைத்தனா்.
இதுகுறித்த புகாரின்பேரில் ,அரகண்டநல்லூா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
தொடர்புடையது

ரயிலில் இருந்து தவறி விழுந்து நேபாள பெண் உயிரிழப்பு

துவரங்குறிச்சி அருகே பைக்கிலிருந்து தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மதுபோதையில் கிணற்றில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

மாடியிலிருந்து தவறி விழுந்து தொழிலாளி உயிரிழப்பு
விடியோக்கள்
நெருங்கும் பிளே ஆஃப் சுற்று: 8 அணிகளுக்கு நடுவில்தான் போட்டி! | Chennai Super Kings |
தினமணி செய்திச் சேவை

Podcast | இண்டியா கூட்டணி எதிர்காலம்: திமுக முன் உள்ள வாய்ப்புகள் என்ன? | News and Views | Epi - 33
தினமணி செய்திச் சேவை

விமர்சனங்களைத் தாண்டி வென்று காட்டிய விஜய் TVK Vijay | CM Vijay | MK Stalin | Edapadi Palaniswami
தினமணி செய்திச் சேவை

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

