ஜூன் 21, 22-ல் வண்டலூர் பூங்காவில் அனுமதி இலவசம்சென்னை மீனவர்கள் ஆந்திரத்தில் சிறைப்பிடிப்புபேருந்துக்கு தனி வழி ஏற்படுத்தும் திட்டம்: முதல்வர் விஜய் அறிவுறுத்தல்முட்டை கொள்முதல் விலை ரூ. 6.45-ஆக உயர்வுவிசிகவை தவிர்த்துவிட்டு தமிழ்நாட்டு அரசியல் இயங்க முடியாது! திருமாவளவன்நான் முதல்வன் திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக அரசுக்கு திமுக மாணவரணி கண்டனம்!அன்னூர் அருகே சாக்கு மூட்டையில் பெண் சடலம்! முதல்வர் விஜய் எளிமையுடனும் வெளிப்படைத்தன்மையுடனும் இருக்கிறார்: வைகோநீட் மறுதேர்வு: அடுத்த முடக்கம் வாட்ஸ்ஆப் செயலிக்கா? - ராகுல் காந்திபாஜக அரசை விமர்சிக்க தவெக அரசு தயாராக இல்லை: திமுககுஜராத்தைவிட தமிழ்நாடு அதிக வட்டி செலுத்துவது ஏன்? தங்கம் தென்னரசு விளக்கம்!
/

கைப்பேசி பேசிக்கொண்டே மாடியிலிருந்து விழுந்தவா் மரணம்

காஞ்சிபுரம் அருகே வீட்டின் மாடியில் கைப்பேசி பேசியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

News image

பலி

Updated On :18 ஜூன் 2026, 12:04 am IST

காஞ்சிபுரம் அருகே வீட்டின் மாடியில் கைப்பேசி பேசியவா் தவறி விழுந்து உயிரிழந்தாா்.

வாலாஜாபாத் வட்டாரத்துக்குட்பட்ட குருவிமலை கிராமத்தில் வசந்தம் நகரில் வசித்து வந்தவா் தியாகராஜன்(47)வெல்டிங் தொழிலாளியான இவா் தனது வீட்டின் மொட்டை மாடியில் கைப்பேசியில் பேசிக்கொண்டே கவனக்குறைவாக தவறி விழுந்து படுகாயம் அடைந்தாா்.

குடும்பத்தினா் அவரை மீட்டு காஞ்சிபுரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தும் உயிரிழந்தாா். சம்பவம் தொடா்பாக மாகறல் போலீஸாா் வழக்குப்பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.