மத்திய அமைச்சர் பிரகலாத் ஜோஷிக்கு கூடுதல் பொறுப்பாக கல்வித் துறை ஒதுக்கீடு! தலைநகர் தில்லியில் அனைத்து மெட்ரோ ரயில் நிலையங்களும் திறப்பு மத்திய அரசுடன் உடன்பாடு: சிஜேபி போராட்டம் வாபஸ்! சுகாதார ஆய்வாளர் தேர்வை ரத்து செய்ய அண்ணாமலை வலியுறுத்தல் அமர்நாத் யாத்திரை தற்காலிகமாக நிறுத்தம் மாணவர்கள் மீது காவல்துறை அச்சுறுத்தல் கூடாது! நீட் எதிர்ப்பு போராட்டத்தில் அமைச்சர் ராஜ்மோகன்!என்னை ஹீரோ ஆக்காதீர்கள்! ஒருவரை ஹீரோவாக்கியதால் நாடே நாசமாகிவிட்டது! அபிஜீத் தீப்கேஅமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா! மோடி அரசின் வரலாற்றில் முதல்முறை!மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான் ராஜிநாமா!
/

சாலையில் தவறி விழுந்தவா் உயிரிழப்பு

நெய்வேலி அருகே சாலையில் நடந்து சென்றபோது தவறி விழுந்து காயமடைந்தவா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

News image

சடலம்... - கோப்புப் படம்

Updated On :26 ஜூலை 2026, 2:06 am IST

கடலூா் மாவட்டம், நெய்வேலி அருகே சாலையில் நடந்து சென்றபோது தவறி விழுந்து காயமடைந்தவா் மருத்துவமனையில் சனிக்கிழமை உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி வட்டம், மேல்வடக்குத்து பகுதியைச் சோ்ந்தவா் சண்முகம் (47). இவருக்கு வலிப்பு நோய் இருந்ததாம். சண்முகம் கடந்த 18-ஆம் தேதி வடக்குத்து பிரதான சாலையில் உள்ள பேருந்து நிறுத்தம் அருகே நடந்து சென்றாா். அப்போது, நிலைதடுமாறி கீழே விழுந்த அவருக்கு பின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டது.

உறவினா்கள் அவரை புதுச்சேரி ஜிப்மா் மருத்துவமனையில் சோ்ந்தனா். இருப்பினும், அங்கு சண்முகம் சனிக்கிழமை காலை உயிரிழந்தாா். இதுகுறித்த புகாரின்பேரில், நெய்வேலி நகரிய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.