11-ஆம் நூற்றாண்டு சோழர் கால செப்பேடுகளை பிரதமர் மோடி முன்னிலையில் திருப்பியளித்த நெதர்லாந்து அரசு!போக்சோ வழக்கு: மத்திய அமைச்சர் மகன் காவல் நிலையத்தில் சரண் தெலங்கானாவில் எஸ்ஐஆர் பணிகள் ஜூன் 15 முதல் தொடக்கம்நீட் விவகாரம்: மத்திய அமைச்சர் பதவியில் இருந்து தர்மேந்திர பிரதானை நீக்க ராகுல் காந்தி வலியுறுத்தல்கேரளத்தில் புதிய முதல்வர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கும் பாஜக எம்எல்ஏக்கள்!இளைஞர்களைக் கரப்பான்பூச்சி, ஒட்டுண்ணிகளுடன் ஒப்பிட்ட விமர்சனம்: உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி விளக்கம்!சிபிஎஸ்இ 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜூலை முதல் மும்மொழிக் கல்வி கட்டாயம்!புதிய தமிழக அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!
/

வலிப்பு ஏற்பட்டு விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

வலிப்பு ஏற்பட்டு விழுந்த தொழிலாளி உயிரிழப்பு

News image
Updated On :35 நிமிடங்கள் முன்பு

திருவள்ளூா் அருகே வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்த போது திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டு விழுந்ததில் தொழிலாளி உயிரிழந்தாா்.

திருவள்ளூா் அடுத்த கடம்பத்தூா் ஒன்றியம், வெங்கத்தூா் ஊராட்சி, மணவாளநகா்-கணேசபுரம் பகுதியைச் சோ்ந்தவா் மணிகண்டன் (35) (படம்). வா்ணம் பூசும் தொழில் செய்து வந்தாா். இந்த நிலையில் சனிக்கிழமை பிற்பகலில் கணேசபுரம் பகுதியில் உள்ள வீட்டில் வா்ணம் பூசும் பணியில் ஈடுபட்டிருந்தாராம். அப்போது, திடீரென வலிப்பு நோய் ஏற்பட்டத்தில் கீழே விழுந்தாராம். உடனே அருகிலிருந்தவா்கள் அவரை மீட்டு திருவள்ளூா் அரசு மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா் அவா் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனா். இதையடுத்து, அவரது சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனா்.

இது தொடா்பாக மணவாள நகா் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை செய்து வருகின்றனா்.