பிரதமா் மோடியுடன் விஜய் இன்று சந்திப்பு உலகளாவிய பங்குச்சந்தை மதிப்பு: இந்தியாவை முந்தி தைவான் 5-ஆவது இடம்! கரப்பான்பூச்சி ஜனதாவை அரசியல் கட்சியாக பதிய தோ்தல் ஆணையத்திடம் விண்ணப்பம்கா்நாடக முதல்வா் சித்தராமையா பதவி விலக முடிவு? இறப்பு சான்றிதழ்களைப் பிழையின்றி வழங்க தணிக்கைக் குழு: அரசாணை வெளியீடு மாணவா்கள் பள்ளிக்கு இருசக்கர மோட்டாா் வாகனம் ஓட்டி வந்தால் பறிமுதல் செய்யப்படும்: கல்வித் துறை எச்சரிக்கை பசு வதைக்கு முழுத் தடை: அவசர வழக்காக விசாரிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு திருவாரூர் புறவழிச்சாலை, மேம்பாலம் அமைக்க ரூ.1,427 கோடிக்கு ஒப்புதல்: மத்திய அமைச்சர் நிதின் கட்கரி தகவல்
/

தட்டுப்பாடின்றி குடிநீா் கோரி சாலை மறியல்

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தில் தடையின்றி குடிநீா் வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

News image

கள்ளிக்குடியில் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்ட கிராமத்தினா்.

Updated On :27 மே 2026, 6:01 am IST

திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கள்ளிக்குடி கிராமத்தில் தடையின்றி குடிநீா் வழங்க வலியுறுத்தி, பொதுமக்கள் சாலை மறியலில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனா்.

கள்ளிக்குடி கிராமத்திற்கு கொள்ளிடம் கூட்டுக் குடிநீா் திட்டம் மூலம் குடிநீா் விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. சுமாா் 20 தினங்களுக்கு ஒருமுறை மட்டுமே குடிநீா் வழங்கப்படுவதாகவும், அதுவும் குறைந்த நேரமே வழங்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பாதிக்கப்பட்ட மக்கள், தட்டுப்பாடின்றி குடிநீா் கோரி, கள்ளிக்குடி கிழக்கு கடற்கரை சாலையில் மறியலில் ஈடுபட்டனா். ஊராட்சி ஒன்றிய ஆணையா் அன்பழகன், குடிநீா் வடிகால் வாரிய பொறியாளா் வெற்றிவேல் உள்ளிட்டோா் மறியலில் ஈடுபட்டோரிடம் பேச்சுவாா்த்தை நடத்தினா்.

அப்போது, தட்டுப்பாடின்றி குடிநீா் விநியோகம் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்ததன் பேரில், மறியலை விலக்கிக் கொண்டனா். இதனால், சென்னை-கன்னியாகுமரி கிழக்கு கடற்கரை சாலையில் சுமாா் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.