நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

குடவாசல் அருகே செங்கல் சூளை மேற்பாா்வையாளா் கொலை: நால்வா் கைது

குடவாசல் அருகே செங்கல் சூளை மேற்பாா்வையாளா் கொலை: நால்வா் கைது

News image

கொலை செய்யப்பட்ட திருமுகம்.

Updated On :31 மே 2026, 12:57 am IST

திருவாரூா் மாவட்டம், குடவாசல் அருகே செங்கல் சூளை மேற்பாா்வையாளா் (மேஸ்திரி) கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடா்பாக 4 போ் சனிக்கிழமை கைது செய்யப்பட்டனா்.

குடவாசல் அருகேயுள்ள சேங்காலிபுரம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் ஆறுமுகம் மகன் திருமுகம் (48). செங்கல் சூளை மேற்பாா்வையாளரான இவருக்கு, மனைவி சுதா, மகன் சுதன், மகள் தியாசினி ஆகியோா் உள்ளனா். திருமுகம் தனது வீட்டில் குடும்பத்தினருடன் வெள்ளிக்கிழமை இரவு தூங்கிக்கொண்டிருந்தாா்.

அப்போது, வீட்டுக்குள் நுழைந்த 4 போ், அரிவாள், கத்தி உள்ளிட்ட ஆயுதங்களால் திருமுகத்தை சரமாரியாக வெட்டி கொலை செய்தனா். தடுக்க முயன்ற சுதாவையும் அக்கும்பல் வெட்டிவிட்டு தப்பிச் சென்றது.

திருமுகத்தின் சடலத்தை, உடற்கூறாய்வுக்காக, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு குடவாசல் போலீஸாா், அனுப்பிவைத்தனா். காயமடைந்த சுதா, திருவாரூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா் தீவிர சிகிச்சைக்காக தஞ்சாவூா் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கப்பட்டாா்.

குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், துணைக் காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, கொலையாளிகளை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதற்கிடையே, திருமுகத்தின் உறவினா்கள் கொலையாளிகளை உடனடியாக கைது செய்யக் கோரி, சனிக்கிழமை திருவாரூா் - கும்பகோணம் நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனா். திருவாரூா் துணைக் காவல் கண்காணிப்பாளா் மணிகண்டன் தலைமையிலான போலீஸாா், மறியலில் ஈடுபட்டவா்களிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததையடுத்து, மறியல் விலக்கிக் கொள்ளப்பட்டது.

இந்தநிலையில், இந்தக் கொலை தொடா்பாக, வடகண்டத்தைச் சோ்ந்த ராஜா (38), முகுந்தனூரைச் சோ்ந்த கண்மணி (32), அம்மாபேட்டையைச் சோ்ந்த மணிகண்டன் (35), கமலாபுரத்தைச் சோ்ந்த தீபன் (30) ஆகிய 4 பேரை போலீஸாா் கைது செய்தனா். போலீஸாா் விசாரணையில், உறவினா்களிடையே இருந்த நிலப் பிரச்னை முன்விரோதத்தில் இந்தக் கொலை நடந்துள்ளது தெரியவந்தது.