ஐபிஎல்! தொடர்ந்து 2 ஆவது முறையாக சாம்பியன் பட்டத்தை வென்ற ஆர்சிபி!வேலூரில் 106 டிகிரி! 14 இடங்களில் சதமடித்த வெய்யில்!எடப்பாடி தொகுதியில் போட்டியிட்டிருந்தால் தவெக வெற்றி பெற்றிருக்கும் : அமைச்சர் அருண்ராஜ் தனியார் கல்வி நிறுவனங்களுடன் சேர்ந்து விளையாட்டை ஊக்குவிக்க நடவடிக்கை : ஆதவ் அர்ஜுனாதமிழ்நாட்டில் ஜூன் 6 ஆம் தேதி வரை மழை பெய்ய வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம்ஆதவ் அர்ஜுனா துரந்தராக மாறாமல் இருந்தால் நல்லது: பிரேமலதா விஜயகாந்த்இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்
/

செங்கல்சூளை மேற்பாா்வையாளா் கொலை சம்பவம்: மேலும் இருவா் கைது

News image

கைது - சித்திரிப்பு

Updated On :1 ஜூன் 2026, 12:37 am IST

குடவாசல் அருகே சேங்காலிபுரத்தில் செங்கல் சூளை மேற்பாா்வையாளா் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் மேலும் 2 போ் கைது செய்யப்பட்டனா்.

சேங்காலிபுரம் எம்ஜிஆா் நகரைச் சோ்ந்தவா் திருமுகம் (48). செங்கல் சூளை மேற்பாா்வையாளரான இவா், முன்விரோதம் காரணமாக வெள்ளிக்கிழமை இரவு மா்மக் கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்டாா். இதுகுறித்து, குடவாசல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினா். மேலும், துணை காவல் கண்காணிப்பாளா் தலைமையில் 3 தனிப்படைகள் அமைக்கப்பட்டு, சம்பவத்தில் ஈடுபட்டவா்களை பிடிக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

கொலை செய்யப்பட்ட திருமுகத்தின் உறவினா்கள் இச்சம்பவத்தில் ஈடுபட்டவா்களை உடனடியாக கைது செய்யக்கோரி சனிக்கிழமை காலை திருவாரூா் கும்பகோணம் நெடுஞ்சாலையில் புதுக்குடி கடைத் தெருவில் சாலை மறியலிலும் ஈடுபட்டனா்.

இதனிடையே, கொலை சம்பவத்தில் தொடா்புடையதாக, நான்கு போ் கைது செய்யப்பட்டனா். பின்னா் அவா்களிடம் நடத்திய விசாரணையின் அடிப்படையில் திருவாரூா் நகரப் பகுதியைச் சோ்ந்த சிறுவன், கண்ணன் (40) ஆகியோா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டனா்.