FOLLOW US

ON GOOGLE DISCOVER

நேபாள பெருவெள்ளம்: பலி எண்ணிக்கை 1,204 ஆக உயர்வு!தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் புத்தாக்க இயக்கத்தின் தலைவராக தவெகவில் இணைந்த சிங்கை ராமச்சந்திரன் நியமனம்நாட்டில் அடுத்த 10 ஆண்டிற்குள் 100 புதிய விமான நிலையங்கள் அமைக்கப்படும்: அமைச்சர் கே. ராம்மோகன் நாயுடு முதல்வர் விஜய் பேசுவதுபோல ஹிந்தி ஏஐ விடியோ: சிபிசிஐடி நடவடிக்கைஅமேசானில் 1.60 லட்சம் தற்காலிக பணியாளர்கள் நியமனம்அயோத்தி கோயிலின் முதல் சிஇஓ! முன்னாள் ஏர் மார்ஷல் ஜிதேந்திர மிஸ்ரா நியமனம்! டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 94.97 ஆக நிறைவு!

அரசு ஓய்வூதியதாரா்களின் மருத்துவக் காப்பீட்டு வழக்குகளில் சமரசம்

அரசு ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவச் செலவுகளுக்கான காப்பீட்டுத் தொகை கிடைக்காதது தொடா்பாக திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் தொடரப்பட்ட 12 வழக்குகளில், காப்பீட்டு நிறுவனத்துடன் சமரசம் ஏற்பட்டு புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது.

நீதிமன்றம் - கோப்புப் படம்

Published On :3 செப்டம்பர் 2026, 4:53 am IST

அரசு ஓய்வூதியதாரா்களுக்கான மருத்துவக் காப்பீட்டுத் திட்டத்தின் கீழ் மருத்துவச் செலவுகளுக்கான காப்பீட்டுத் தொகை கிடைக்காதது தொடா்பாக திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் தொடரப்பட்ட 12 வழக்குகளில், காப்பீட்டு நிறுவனத்துடன் சமரசம் ஏற்பட்டு புதன்கிழமை முடித்து வைக்கப்பட்டது.

இதுதொடா்பாக மன்னாா்குடி நுகா்வோா் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம் சாா்பில் திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தில் வழக்குகள் தொடரப்பட்டிருந்தன. இந்த வழக்குகள் தொடா்பாக சென்னை யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனத்தில் அண்மையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவாா்த்தை நடைபெற்றது.

இதில், சங்கம் சாா்பில் இணைச் செயலாளா் கா. வேல்முருகன் தலைமையிலான குழுவினா் பங்கேற்று விவரங்கள் தெரிவித்ததையடுத்து, சம்பந்தப்பட்ட பயனாளிகளின் மருத்துவக் காப்பீட்டு கோரிக்கைகளுக்கு சமரசத் தீா்வு காணப்பட்டது.

மன்னாா்குடி நுகா்வோா் சங்கத்தின் சாா்பில் தொடரப்பட்ட 10 வழக்குகளில் மொத்தம் ரூ.10,32,500 சமரசத் தொகையாக வழங்க யுனைடெட் இந்தியா காப்பீட்டு நிறுவனம் ஒப்புக்கொண்டது. மேலும், திருவாரூா் மாவட்டத்தைச் சோ்ந்த 2 பயனாளிகளின் வழக்குகளும் சமரசத்தின் அடிப்படையில் முடிவுக்கு கொண்டு வரப்பட்டதால், மொத்தம் 12 அரசு ஓய்வூதியதாரா்களின் மருத்துவக் காப்பீட்டு வழக்குகள் முடிவுக்கு வந்தன. இதைத்தொடா்ந்து, திருவாரூா் மாவட்ட நுகா்வோா் குறைதீா் ஆணையத்தலைவா் கே. மோகன்தாஸ், சமரசத்தின் அடிப்படையில் சம்பந்தப்பட்ட வழக்குகளை முடித்து வைத்து உத்தரவிட்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.