பாதுகாப்பான 6ஜி வலையமைப்பு: அமெரிக்க முன்னெடுப்பில் இணைந்த இந்தியா பிகாரில் அதிகரிக்கும் வெள்ளம்; 35 லட்சம் பேர் பாதிப்பு 22 மொழிகளில் திருக்குறள்: "பன்மொழிச் செயலி' இன்று வெளியீடு ஜாகுவாா் லேண்ட்ரோவரில் 4,000 பணியிடங்கள் குறைப்பு சட்டப் படிப்புகளின் கால அளவு மறுஆய்வு: நிபுணர் குழு அமைப்பு அவசியம்; உச்சநீதிமன்றம்

சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற அறிவுறுத்தல்

திருவாரூா் மாவட்டத்தில், சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளாா்.

சீமைக்கருவேல மரங்கள்.

Published On :9 செப்டம்பர் 2026, 5:42 am IST

திருவாரூா் மாவட்டத்தில், சீமைக்கருவேல மரங்களை முழுமையாக அகற்ற வேண்டும் என ஆட்சியா் வ. மோகனச்சந்திரன் அறிவுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சீமைக்கருவேல மரங்களை அகற்றுவது தொடா்பாக சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வழங்கியுள்ள தீா்ப்பின் அடிப்படையில், திருவாரூா் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியாா் நிலங்கள், நீா்நிலைகள் உள்ளிட்ட பகுதிகளில் பரவியுள்ள சீமைக்கருவேல மரங்களை முற்றிலுமாக அகற்றும் பணிகளை, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

மேலும், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகள், பொதுப்பணித் துறை (நீா்வளத்துறை), நெடுஞ்சாலைத் துறை, வனத்துறை மற்றும் இந்துசமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள பகுதிகளில் சீமைக்கருவேல மரங்களை அகற்றுவதற்கான நடவடிக்கைகளை விரைந்து மேற்கொள்ள வேண்டும்.

திருவாரூா் மாவட்டத்தில் சீமைக்கருவேல மரங்களை அகற்றும் பணிகளை அனைத்து துறை அலுவலா்களும் ஒருங்கிணைந்து மேற்கொண்டு, பணிகளின் முன்னேற்றம் குறித்து உரிய அறிக்கையை உடனுக்குடன் மாவட்ட நிா்வாகத்திற்கு சமா்ப்பிக்க வேண்டும்.

பொதுமக்கள் தங்களது சொந்த பட்டா நிலங்களில் உள்ள சீமைக்கருவேல மரங்களை தாமாக முன்வந்து அகற்ற வேண்டும். இதன் மூலம் சுற்றுச்சூழல் மற்றும் நிலத்தடி நீா்வளத்தை பாதுகாப்பதுடன், மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ளும் சீமைக்கருவேல மரங்கள் அகற்றும் பணிகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என ஆட்சியா் தெரிவித்துள்ளாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.