நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

மனித மனங்களை இணைக்கும் நவராத்திரி !

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனங்களிலும் குதூகலத்தை ஏற்படுத்தும் ஓர் அருள் பண்டிகை நவராத்திரி! ஓர் ஆண்டில் தொடர்ந்து 9 நாள்கள் அம்பிகைக்கு நாடெங்கிலும் பரவலாக வழிபாடு நடத்தும் ஓர் உன்னதப்

News image
Updated On :19 செப்டம்பர் 2012, 11:42 pm

வே.சுந்தரேஸ்வரன்

சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரின் மனங்களிலும் குதூகலத்தை ஏற்படுத்தும் ஓர் அருள் பண்டிகை நவராத்திரி! ஓர் ஆண்டில் தொடர்ந்து 9 நாள்கள் அம்பிகைக்கு நாடெங்கிலும் பரவலாக வழிபாடு நடத்தும் ஓர் உன்னதப் பண்டிகை இது.    

     தலைநகரப் பகுதிகளான மயூர் விஹார், லோதி ரோடு, திரிலோக்புரி, தில்ஷாத் கார்டன், நொய்டா, குர்கான், கேசவபுரம், ரோஹிணி, தசரதபுரி, ஜனக்புரி, துவாரகா, மங்கோல்புரி, கரோல் பாக் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் உள்ள கோயில்களில், அரசு- தனியார் அலுவலகங்களில் இப் பண்டிகையை ஒட்டி சிறப்பு அலங்கார நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன.

   தில்லியில் பல்வேறு இடங்களில் வாழும் தமிழர்கள் வீடுகளில் பொம்மைக் கொலு அமைத்துள்ளனர். தலைநகர் பகுதியையடுத்த குர்கான், நொய்டா ஆகிய நகரங்களில் வாழும்

தமிழர்களின் வீடுகள் பலவற்றிலும் பொம்மைக் கொலு வைக்கப்பட்டுள்ளது.

  நவராத்திரி வேளைகளில் பழமை மாறாமல் பஜனையையும் சிலரது வீடுகளில் நடத்தி வருகின்றனர். பெண்கள் அம்பாளின் பாடல்களையும், நாமாவளியையும் பாட, சிறுவர்களும் உடன் சேர்ந்து பாடுவது பக்திப் பரவசத்தை ஏற்படுத்துவதாக உள்ளது.

  தேசியத் தலைநகர் பிராந்தியமான நொய்டா கேந்திரிய விஹார் செக்டர் 51-ல் வசிக்கும் அம்பிகா ஸ்ரீகாந்த் பல ஆண்டுகளாகத் தனது வீட்டில் கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடி வருவதாகக் கூறுகிறார்.

   ""நவராத்திரி விழாக் காலங்களில் எனது மாமியார் வீட்டில் கொலுப் பொம்மைகள் வைத்து வழிபாடு நடத்தப்படும். அவரைப் பின்பற்றி, இப்போது நானும் பல ஆண்டுகளாக நவராத்திரியின்போது பொம்மைக் கொலு வைக்கிறேன். மாலை வேளைகளில் வீடுகளில் லலிதா சகஸ்ரநாமப் பாராயணம் செய்து வருகிறோம். இதில் பெண்கள் பலரும் ஒன்றுகூடி வழிபடும்போது தமிழகத்தில் இருந்தால் எப்படி ஓர் உணர்வு கிட்டுமோ அதே போன்ற உணர்வைப் பெறுகிறோம்'' என்றார்.

  நொய்டாவில் செக்டர் 34-ல் வசிக்கும் நாகலட்சுமி கூறியது:

 ""நாங்கள் தலைமுறை, தலைமுறையாக வீட்டில் கொலு வைத்து நவராத்திரியைக் கொண்டாடி வருகிறோம். இது ஒரு ஆன்மிக விழா மட்டுமல்ல; மனித உறவை வலுப்படுத்தும் விழா. எங்கள் வீட்டில் கீதோபதேசம், ராமன், சீதை, அம்பாள் சிலைகள், ராதா- கிருஷ்ணர் சிலைகள், வெளிநாட்டினரின் விதவிதமான உணவு வகை பொம்மைகள், விவசாயக் கருவி பொம்மைகள் ஆகியவற்றை வைத்துள்ளோம்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.