நொய்டாவில் மழைநீர் சேகரிப்புக் கருத்தரங்கு
அவ்வைத் தமிழ்ச் சங்கத்தின் சார்பில் மழைநீர் சேகரிப்பின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் கருத்தரங்க நிகழ்ச்சி நொய்டா பகுதியில் சனிக்கிழமை நடைபெற்றது.
இக் கருத்தரங்கை உத்தரப் பிரதேச மாநிலம், கௌதம் புத் நகர் மாவட்ட ஆட்சியர் டாக்டர் எம்.கே. சண்முக சுந்தரம் தொடங்கி வைத்தார்.
அவர் பேசுகையில், மழை நீர் சேகரிப்புக்கு உத்தரப் பிரதேச மாநில அரசு மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார்.
மேலும், கௌதம் புத்தா நகர் மாவட்டத்தில் மழைநீர் சேகரிப்புக்கான நடவடிக்கைகள் குறித்தும் அவர் விளக்கினார்.
மத்திய நிலத்தடி நீர் வாரியத்தின் உறுப்பினர் என்.வரதராஜ், குடியிருப்புகளில் நிலத்தடி நீரையும், மழைநீரையும் சேகரிப்பது, பாதுகாப்பது ஆகிய முறைகள் குறித்து விரிவாகப் பேசினார். மழைநீர் சேகரிப்புத் தொடர்பாக குடியிருப்போர் எழுப்பி சந்தேகங்களுக்கு அவர் விளக்கமும் அளித்தார்.
இக்கருத்தரங்கில், நொய்டா பகுதியைச் சேர்ந்த குடியிருப்போர் நலச் சங்கங்களின் தலைவர்கள், செயலர்கள் பலர் கலந்துகொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
