இரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்! ‘ஆபரேஷன் சிந்தூா் 2.0’-க்கு பாதுகாப்புப் படைகள் தயாா்: ராணுவ தலைமைத் தளபதி உபேந்திர துவிவேதி!மேற்கு வங்கத்தில் மம்தாவின் மருமகன் அபிஷேக் பானா்ஜி மீது தாக்குதல்: கற்கள், காலணிகள் வீசப்பட்டதால் பரபரப்பு!1,200 கோயில்களின் நகைகள், சொத்துகள் விரைவில் கணக்கெடுப்பு: திருவிதாங்கூா் தேவஸ்வம் திட்டம்கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில்: உச்ச நேரங்களில் 6 - 10 நிமிஷங்களுக்கு ஒரு ரயில்! நாட்டில் ரூ. 48,000 கோடிக்கு வங்கி மோசடிகள்!நடிகர் அஜித் குமாரின் தாயார் உடலுக்கு முதல்வர் விஜய் அஞ்சலி! திருவாரூர்: சேங்காலிபுரம் பகுதியில் வீடு புகுந்து மேஸ்திரி படுகொலை - 3 பேர் கைதுபெங்களூரில் ஐபிஎல் கொண்டாட்டங்களுக்கு தடைஆளுநர் மாளிகையில் காவி உடையில் திருவள்ளுவர் படம்: உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!ஆட்சி அமைக்க டி.கே. சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு சென்னை உள்பட 5 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் குற்ற வழக்குத் தொடர்வுத்துறை இயக்குநர் கிருஷ்ணராஜா பணிநீக்கம்
/

தில்லிகை இலக்கியக் கூட்டம்

தில்லிகை இலக்கிய வட்டத்தின் சார்பில் "இலக்கிய ஆளுமைகள்' என்ற தலைப்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை இலக்கியக் கூட்டம் நடைபெற்றது.

Updated On :13 மே 2013, 12:56 am IST

தில்லிகை இலக்கிய வட்டத்தின் சார்பில் "இலக்கிய ஆளுமைகள்' என்ற தலைப்பில் தில்லித் தமிழ்ச் சங்கத்தில் சனிக்கிழமை இலக்கியக் கூட்டம் நடைபெற்றது.

அதில், தமிழின் நவீன பயண இலக்கியத்தின் தந்தையாக கருதப்படும் சே. பா. நரசிம்மலு நாயுடுவின் ஆளுமை பற்றி ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் ச. பாரதிபிரகாஷ் பேசினார்.

"யாத்திரை என்பதை இலக்கிய வடிவமாக மாற்றியவர் நரசிம்மலு நாயுடு. ஆரியர் திவ்விய தேச யாத்திரையின் சரித்திரம் என்ற தமிழின் நவீனப் பயண இலக்கிய நூலை 1889-ஆம் ஆண்டு அவர் எழுதினார்.

அந்த நூலில், தான் பயணம் செய்த பகுதிகளிலிருந்த கல்வெட்டுகள், கோட்டைகள், மடங்கள் ஆகியவை குறித்து பதிவு செய்துள்ளார். அந்த நூலை மறுபதிப்பு செய்வது அவசியம்' என்று அவர் குறிப்பிட்டார்.

பாரதி, பாரதிதாசன் ஆளுமைகள் குறித்து தில்லித் தமிழ்க் கல்விக் கழகப் பள்ளி ஆசிரியை ராஜ ராஜேஸ்வரி காளியப்பன் பேசினார். "தேச விடுதலையை உயர்த்திப் பிடித்த பாரதியின் கவிதைகள் பிறமொழிகளில் மொழி பெயர்க்கப்பட வேண்டும்.

தமிழ், தமிழினம், தமிழ்நாடு என்ற வரையறைக்குள் கவிதைகளை எழுதியவர் பாரதிதாசன். இரு கவிஞர்களும் கவிதைக்கான பாடு பொருள்களை சமூகத்திலிருந்தே எடுத்தனர்' என்றார் அவர்.

டோனி மாரிசன், டோரிஸ் லெஸ்ஸிங் ஆகிய பெண்ணிய எழுத்தாளர்கள் குறித்து, உலக இலக்கிய ஆளுமைகள் என்ற தலைப்பில் ஜவாஹர்லால் நேரு பல்கலைக்கழக மாணவி அ.சு. காயத்ரி பேசினார்.

கருப்பின மக்களின் மன நிலையைக் காட்சிப்படுத்தும் டோனி மாரிசனின் எழுத்து குறித்தும், பெண் எழுத்தாளரின் வாழ்க்கை உணர்வுகளை மையப்படுத்தி அமைந்த "தி கோல்டன் நோட் புக்' என்ற புதினத்தில் டோரிஸ் லெஸ்ஸிங்கின் இலக்கிய ஆளுமை குறித்

தும் அவர் எடுத்துரைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.