நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பிரமிப்பூட்டும் நவீன பாதுகாப்புக் கருவிகள்!

பயங்கரவாதம், தீவிரவாதம் என பல்வேறு வடிவங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உலகம் எதிர்கொண்டு வரும் சூழலில், அவற்றைச் சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் நவீனப் பாதுகாப்பு சாதனங்கள், ஆயுதங்கள் அவசரத் தேவையாகி வருகின்றன.

News image
Updated On :8 அக்டோபர் 2015, 6:41 pm

வே.சுந்தரேஸ்வரன்

பயங்கரவாதம், தீவிரவாதம் என பல்வேறு வடிவங்களில் பாதுகாப்பு அச்சுறுத்தல்களை உலகம் எதிர்கொண்டு வரும் சூழலில், அவற்றைச் சமாளிக்கவும், எதிர்கொள்ளவும் நவீனப் பாதுகாப்பு சாதனங்கள், ஆயுதங்கள் அவசரத் தேவையாகி வருகின்றன.

 மேலும், தனி நபர்களின் உடைமை, உயிர் ஆகியவற்றின் பாதுகாப்புக்கும், கொள்ளை, திருட்டுச் சம்பவங்கள் ஆகியவை நிகழாமல் தடுப்பதும், கண்காணிப்பு மேற்கொள்வதும், அதற்கான பாதுகாப்புத் தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்துவதும் இப்போது அவசியமாகிவிட்டது.

 இவற்றை அறிந்து கொள்ளும் வாய்ப்பை, தில்லி பிரகதி மைதானத்தில் வியாழக்கிழமை தொடங்கிய பதினெட்டாவது இந்திய சர்வதேசப் பாதுகாப்பு கண்காட்சி அமைத்துக் கொடுத்துள்ளது என்றே சொல்லலாம்.

 பாதுகாப்புத் துறையில் பயன்படுத்தப்பட்டு வரும் பல்வேறு தொழில்நுட்பங்கள், புதிதாக வந்துள்ள நவீனப் பாதுகாப்புக் கருவிகள், சாதனங்கள் கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

 இன்றைக்கு பரவலாக அலுவலகங்களிலும் வீடுகளிலும் கண்காணிப்புக் கேமரா பொருத்தும் நடைமுறை உருவாகி வருகிறது. அக்கருவிகளைத் தயாரிக்கும் "ஸ்பார்ஸ்' நிறுவனத்தின் பிராந்திய மேலாளர் அமித் குமார் கூறுகையில், "அலுவலகங்களில் வேலை செய்யும் ஊழியர்களின் செயல்பாடு, பணித் திறன், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு காரணங்களுக்காக கண்காணிப்புக் கேமராக்கள் நிறுவப்படுகின்றன. இவற்றில் நவீனத் தொழில்நுட்ப வசதிகள் அடங்கிய எச்.டி. கேமராக்கள் தற்போது விரும்பிப் பயன்படுத்தப்படுகின்றன. சராசரியாக ஒரு கேமராவின் விலை ரூ.3 ஆயிரம் ஆகிறது. 4 கேமராக்கள், அவற்றை நிறுவுவதற்கான கட்டணம் ஆகியவை சேர்ந்து மொத்தம் ரூ.25 ஆயிரம் செலவாகும்' என்றார்.

 "இஸ்ரோ' நிறுவனத்தின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள அரங்கில், ஜிஎஸ்எல்வி, பிஎஸ்எல்வி, ஜிசாட் என பல்வேறு செயற்கைக்கோள் மாதிரிகள் பார்வைக்கு காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  எல்லைப் பாதுகாப்புப் படை, தில்லி காவல் துறை, மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை ஆகியவையும் தங்களின் செயல்பாடுகளை விளக்கி அரங்குகளை அமைத்துள்ளன.

 கடந்த ஆண்டு நடைபெற்ற கண்காட்சியில் சுமார் 7 ஆயிரம் பார்வையாளர்கள் வந்தனர். இந்த ஆண்டு 8 ஆயிரம் முதல் 10 ஆயிரம் வரை பார்வையாளர்கள் வரக் கூடும் என கண்காட்சி ஏற்பாட்டாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.

 உள்துறை அமைச்சகம், மத்திய தொழிலகப் பாதுகாப்புப் படை, இந்தியப் பாதுகாப்பு மேம்பாட்டு குழு (எஸ்பிஜிஐ) ஆகியவற்றுடன் இணைந்து இந்திய வர்த்தக மேம்பாட்டு நிறுவனம் இக்கண்காட்சியை நடத்துகிறது. அக்டோபர் 11-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. காலை 10 மணி முதல் மாலை 6 மணி வரை கண்காட்சியை பார்வையிட அனுமதிக்கப்படுகிறது.

200 நிறுவனங்கள், 71 அரங்குகள்

கண்காட்சி குறித்து இந்தியப் பாதுகாப்பு மேம்பாட்டுக் குழு (எஸ்பிஜிஐ) தலைவர் சஞ்சீவ் ஷெகல் கூறுகையில், "கண்காட்சியில் 200 நிறுவனங்கள் 71 அரங்குகளை அமைத்துள்ளன.

பாதுகாப்புத் துறையில் உள்ள நவீனத் தொழில்நுட்ப வசதிகளை அறிந்துகொள்ளும் வகையில், பல்வேறு நவீனக் கருவிகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. 11 நாடுகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்து கொண்டுள்ளனர்' என்றார்.

மிளகு பொடி தெளிப்பான்

 அலுவலகம், வெளியிடங்களுக்குச் செல்லும் போது பாதுகாப்புக்காக பயன்படுத்தப்படும் மிளகு பொடி தெளிப்பான்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. டார்ச் லைட், சிறிய மின்அதிர்வை ஏற்படுத்தும் டார்ச் லைட், ஒலி எழுப்பும் கருவி உள்பட பெண்கள் பாதுகாப்புக்காக "ரக்ஸý' எனும் பெயரில் பிரத்யேக பெட்டியை எஸ்.ஆர். டெக்னோ நிறுவனம் தயாரித்துள்ளது.

40 கிலோ எடையில் கழிப்பறை

 செங்கல், சிமெண்ட் கலவை ஏதுமின்றி 40 கிலோ எடையில் மட்டும் கழிப்பறை, தங்கும் அறை ஆகியவற்றை நிறுவும் தொழில்நுட்பம் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளது.  ஹோப் செக்யூரிட்டி சொல்யூஷன் நிறுவனத்தின் ஜிதான்ஸý கூறுகையில், "காவல் சாவடி, சோதனை அறை, கழிப்பறை, பெண்கள் உடைமாற்றும் அறை, ஓய்வறை என பல்வேறு வகைகளில் பயன்படுத்தும் விதமாக இந்த அறையை உருவாக்கலாம். இதற்கு ரூ.30 ஆயிரம் செலவாகும்' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.