தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்க (டியுஎஸ்யு) தேர்தல் நடத்தும் அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக தில்லி பல்கலைக்கழகப் பதிவாளர் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
2017-2018-ஆம் ஆண்டுக்கான தில்லி பல்கலைக்கழக மாணவர்கள் சங்கத்தின் நிர்வாகக் குழு உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தலை நடத்துவதற்காக தேர்தல் அதிகாரியாக
பல்கலைக்கழகத்தின் வேதியியல் துறை பேராசிரியர் ராஜீவ் குப்தா, தேர்தல் நடத்தும் அதிகாரியாக சட்டப் புலத்தின் பேராசிரியர் முனைவர் பிங்கி சர்மா, கூடுதல் தேர்தல் நடத்தும் அதிகாரியாக வணிகவியல் துறை முனைவர் அபா சுக்லா ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
டியுஎஸ்யு புரவலர் என்ற முறையில் இவர்களை பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் யோகேஷ் தியாகி நியமித்துள்ளார்.
தில்லிப் பல்கலைக்கழக மாணவர் சங்கத்தின் அரசியலமைப்பு விதிகளின்படி சங்கத்தின் நிர்வாகக் குழுக்கான 11 உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெறும் என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.