தில்லி உயர் நீதிமன்ற நீதிபதி ஆசுதோஷ் குமார் உள்பட மூவர் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இது தொடர்பாக மத்திய சட்ட அமைச்சகம் அறிவிக்கை வெளியிட்டுள்ளது. தில்லி உயர் நீதிமன்ற நீதிபதியாக உள்ள ஆசுதோஷ் குமார் பாட்னா உயர் நீதிமன்றத்துக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.
ஒடிஸா உயர் நீதிமன்ற நீதிபதி சத்ருஹனா புஜ்ஹரி சென்னை உயர் நீதிமன்றத்துக்கும், ராஜஸ்தான் உயர் நீதிமன்ற நீதிபதி கோவிந்த மாத்தூர் அலகாபாத் உயர் நீதிமன்றத்துக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அந்த அறிவிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.