எல்லையில் பாக்.  அத்துமீறித் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள பாதுகாப்புச் சாவடிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வியாழக்கிழமை அத்துமீறித் தாக்குதல் நடத்தினர்.
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், உரி பகுதியில் உள்ள பாதுகாப்புச் சாவடிகளில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வியாழக்கிழமை அத்துமீறித் தாக்குதல் நடத்தினர்.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது:
பாரமுல்லா மாவட்டம், உரி பகுதியில் உள்ள பாதுகாப்புச் சாவடிகளில் வியாழக்கிழமை காலை பாகிஸ்தான் ராணுவத்தினர் திடீரென கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அவர்களுக்கு உடனடியாக நமது ராணுவத்தினர் உரிய பதிலடி கொடுத்தனர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் சர்வதேச எல்லைப் பகுதியில் கடந்த செவ்வாய்க்கிழமை பாகிஸ்தான் ராணுவத்தினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த எல்லைப் பாதுகாப்புப் படை (பிஎஸ்எஃப்) வீரர் சுனில் குமார் முர்மு (28) சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com