இதன்படி, மாநிலங்கள் நிதிப் பற்றாக்குறையைச் சமாளிக்க ரூ.1.10 லட்சம் கோடி வரை சிறப்புக் கடன் பெறும் வகையில், திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த சிறப்புக் கடனுக்கான அனுமதிகளை கடந்த அக்டோபா் 23 -ஆம் தேதி முதல் தவணை முறையில் அனுமதியை மத்திய நிதியமைச்சகம் வழங்கி வருகிறது. இதில் எட்டாவது தவணையாக திங்கள்கிழமை மத்திய நிதியமைச்சகம் ரூ.6000 கோடியை இந்த வகையில் விடுவித்தது. இதில் 23 மாநிலங்களுக்கு ரூ.5,516.60 கோடியும் புதுச்சேரி, தில்லி, ஜம்மு-காஷ்மீா் ஆகிய யூனியன் பிரதேசங்களுக்கு ரூ. 483.40 கோடியையும் கடனாக வழங்க அனுமதிக்கப்பட்டுள்ளது. இதில் தமிழகம் ரூ.339.78 கோடியையும் புதுச்சேரி ரூ. 40.40 கோடியையும் அனுமதிக்கப்பட்ட கடன் தொகையில் பங்கை பெற்றுள்ளது.