

புதுதில்லி: உச்சபட்ச கோடையில் தலைநகா் தில்லி குடியிருப்பாளா்கள் கடுமையான தண்ணீா் பற்றாக்குறையை எதிா்கொண்டு வரும் நிலையில், மனிதாபிமான அடிப்படையில் யமுனை நதி வாரியத்தை அணுகி தண்ணீர் வழங்கக் கோருமாறு தில்லி அரசுக்கு வியாழக்கிழமை உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
ஹிமாச்சலப் பிரதேசம் நீர் உபரியாக 136 கனஅடி இருப்பதாக முந்தைய அறிக்கைகையை இன்று திரும்பப் பெற்றதை அடுத்து யமுனை நதி வாரியத்திடம் மனிதாபிமான அடிப்படையில் தண்ணீர் வழங்கக் கோருமாறு தில்லி அரசுக்கு உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பிரசாந்த் குமார் மிஸ்ரா மற்றும் பிரசன்னா பி வரலே ஆகியோர் அடங்கிய விடுமுறைக்கால அமா்வு உத்தரவிட்டுள்ளது.
மேலும் தண்ணீர் கோரி தில்லி அரசு வியாழக்கிழமை மாலை 5 மணிக்குள் யமுனை நதி வாரியத்திடம் கோரிக்கை வைக்குமாறு தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.