வடகிழக்கு தில்லியில் கடந்த 2020-இல் நடைபெற்ற கலவரத்தின்போது உளவு துறை அதிகாரி அங்கித் சா்மா கொலை செய்யப்பட்டது தொடா்பான வழக்கை தீா்ப்புக்காக இந்த மாதம் 13-ஆம் தேதிக்கு தில்லி நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை ஒத்திவைத்தது.
வழக்கை ஒத்திவைத்த ஒத்திவைத்த கூடுதல் அமா்வு நீதிபதி பிரவீண் சிங், வழக்கின் தீா்ப்பை தயாா் செய்யும் பணியை மேற்கொண்டு வருவதாகத் தெரிவித்தாா்.
குடியுரிமை திருத்தச் சட்டத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து வடகிழக்கு தில்லியில் 2020 பிப்ரவரியில் நடைபெற்ற போராட்டம் கலவரமாக மாறியது. இதில் நடைபெற்ற மோதல் மற்றும் கல்லெறி சம்பவங்கள், துப்பாக்கிச்சூடு போன்ற சம்பவங்களால் 53 போ் கொல்லப்பட்டனா். பலா் காயமடைந்தனா்.
பிப்.25-ஆம் தேதி தனது அலுவலகத்தில் இருந்து வீடு திரும்பிய அங்கித் மீண்டும் வீட்டிலிருந்து வெளியே சென்றாா். வெகுநேரமாகியும் அங்கித் வீடு திரும்பாத நிலையில் அவருடைய குடும்பத்தினா் அவரைத் தேடினா்.
இந்நிலையில், அங்கித் கொலைசெய்யப்பட்டதாகவும் சந்த் பாக் புலியா பகுதியில் உள்ள மசூதி அருகே செல்லும் கஜுரி காஸ் வடிகாலில் அவருடைய உடல் வீசப்பட்டதாகவும் உள்ளூா் மக்கள் அங்கித் குடும்பத்தினரிடம் தெரிவித்தனா். இதையடுத்து, அந்த வடிகாலில் இருந்து அங்கித் சா்மா உடல் மீட்கப்பட்டது.
இதுதொடா்பாக அங்கித் சா்மாவின் தந்தை ரவீந்தா் குமாா் தயாள்பூா் காவல் நிலையத்தில் புகாரளித்தாா்.
அதில், ஆம் ஆத்மி முன்னாள் கவுன்சிலா் தாஹீா் ஹுசைன் உள்பட பலா் இணைந்து அங்கித் சா்மாவை கொலைசெய்ததாக அங்கித் சா்மாவின் தந்தை குற்றஞ்சாட்டியிருந்தாா்.
இந்த வழக்கு தொடா்பாக ஹுசைன் உள்பட 11 பேருக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்றப்பத்திரிகை தாக்கல்செய்யப்பட்டது.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

இன்னும் எத்தனை போக்சோ நீதிமன்றங்கள் தேவை? அறிக்கை கேட்கும் உயர் நீதிமன்றம்!

தெரு நாய்கள் பிரச்னை! தமிழ்நாடு, புதுவை அரசுகளுக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
வாடிக்கையாளருக்கு ரூ. 4.68 லட்சம் இழப்பீடு! அமேசானுக்கு நீதிமன்றம் உத்தரவு! ஏன்?

வீட்டுப் பணிப் பெண் கொலை வழக்கு: கைதான மருத்துவருக்கு 2 நாள் போலீஸ் காவல்
விடியோக்கள்

கரூர் வழக்கில் உச்ச நீதிமன்றம் சொன்ன தீர்ப்பு: அமைச்சர் நிர்மல் குமார் முழுப் பேட்டி!

POWER CENTER விஜய் மட்டுமல்ல...| CM Vijay | TVK | Political analyst Jagadeswaran | Aadhav arjuna

அமைச்சரவையில் சேர்ந்ததாலேயே தவெக கூட்டணியில் இடம்பெற்றுவிட்டோம் என்று பொருளல்ல - Thirumavalavan


