தெரு நாய்களை அப்புறப்படுத்துவது தொடர்பான அறிக்கையை தமிழ்நாடு மற்றும் புதுவை அரசுகள் தாக்கல் செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொடா் தெரு நாய்கள் கடியால் குழந்தைகள், முதியவா்கள் பாதிக்கப்படுவது, உயிரிழப்புகள் ஏற்படுவது தொடா்பான வெளியான பத்திரிகை செய்திகளின் அடிப்படையில் கடந்த ஆண்டு ஜூலை மாதம் இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த உச்சநீதிமன்றம், தெரு நாய்கள் மற்றும் பொது இடங்களில் சுற்றித் திரியும் கால்நடைகளை அப்புறப்படுத்துவது தொடா்பாக கடந்த ஆண்டு நவம்பரில் 7-ஆம் தேதி மாநில அரசுகளுக்கு பல்வேறு உத்தரவுகளைப் பிறப்பித்தது.
பள்ளி, மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்கள் அனைத்தும் பிடித்து அப்புறப்படுத்தப்பட வேண்டும். அவ்வாறு பிடிக்கப்படும் தெரு நாய்களுக்கு தடுப்பூசி அல்லது கருத்தடை செய்த பிறகு அவற்றை மீண்டும் பொது இடங்களில் விடக் கூடாது. அவற்றுக்கென பிரத்யேக காப்பகங்கள் அமைக்கப்பட்டு பராமரிக்கப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
இந்த நிலையில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மாநில அரசு செயல்படுத்தியுள்ளதா என்பதை ஆராய சென்னை உயர் நீதிமன்றம் தாமாக வந்து விசாரணைக்கு எடுத்துள்ளது.
இந்த வழக்கில், பள்ளி, மருத்துவமனைகள், அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட பொது இடங்களில் சுற்றித் திரியும் தெரு நாய்களை பிடிக்க உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவு செயல்படுத்தப்பட்டுள்ளதா என்று தமிழ்நாடு, புதுவை அரசுகளுக்கு கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
மேலும், அடுத்த 4 வாரங்களில் தெரு நாய்கள் அப்புறப்படுத்தியது தொடர்பான அறிக்கையைச் சமர்ப்பிக்க தமிழ்நாடு மற்றும் புதுவை மாநில அரசுகளுக்கு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
Summary
Stray dog issue : High Court issues orders to Tamil Nadu and Puducherry governments!
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

நீதித் துறை வரலாற்றில் புதிய சாதனை: ஒரே நேரத்தில் 4 பெண் தலைமை நீதிபதிகள்
அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!

அதிமுக எம்.எல்.ஏ.க்கள் ராஜிநாமா! ஜூன் 17-ல் சென்னை உயர் நீதிமன்றம் விசாரணை!
உதயநிதி வேட்புமனு ஏற்பு: ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!
விடியோக்கள்

அமோனியா வாயு கசிவு விபத்து பற்றி அமைச்சர் விளக்கம்! | TN assembly

முதல்வர் விஜய்க்கு பேரவைத் தலைவர் பிறந்தநாள் வாழ்த்து! | TN Assembly | CM Vijay
Valaipechu Anthanan Interview | மணிக்கணக்கில் புத்தகம் படிக்கிறார் விஜய்!




