நாட்டின் உயர் நீதிமன்றங்களில் ஒரே நேரத்தில் 4 பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.
நாட்டின் உயர் நீதிமன்றங்களில் மொத்தமுள்ள 781 நீதிபதிகளில் 116 பேர் (14.85%) பெண் நீதிபதிகள்.
இந்த 116 பெண் நீதிபதிகளில் 4 நீதிபதிகள் ஒரே நேரத்தில் தலைமை நீதிபதிகளாக பதவி வகிப்பதன் மூலம் இந்தியாவின் நீதித் துறையில் புதிய சாதனை படைத்துள்ளனர்.
பாட்னா உயர் நீதிமன்றத்தில் மீனாட்சி மதன்ராய், குஜராத் உயர் நீதிமன்றத்தில் சுனிதா அகர்வால், மேகாலயா உயர் நீதிமன்றத்தில் ரேவதி மோஹிதே தேரே, ஆந்திர பிரதேச உயர் நீதிமன்றத்தில் லிசா கில் ஆகிய நால்வரும் தலைமை நீதிபதிகளாக பதவி வகித்து வருகின்றனர். இந்தியாவில் ஒரே நேரத்தில் 4 பெண் நீதிபதிகள் ஒரே நேரத்தில் முழு நேர தலைமை நீதிபதிகளாக இருப்பது இதுவே முதல்முறை.
இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டிலும் இதுபோன்று 4 பெண் நீதிபதிகள் தலைமை நீதிபதிகளாக இருந்திருந்தாலும், அவர்களில் ஒருவர் மட்டும் பொறுப்பு தலைமை நீதிபதியாகவே பணியாற்றி வந்தார்.
Summary
In A First, Four Women High Court Chief Justices In India
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமைச்சர் செங்கோட்டையன் வெற்றியை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் வழக்கு!
உதயநிதி வேட்புமனு ஏற்பு: ஆவணங்களை தாக்கல் செய்ய தேர்தல் ஆணையத்துக்கு உயர் நீதிமன்றம் உத்தரவு!

மோகனா உள்பட உச்ச நீதிமன்றத்துக்கு 5 நீதிபதிகள் நியமனம்!

சென்னை உயர் நீதிமன்றத்துக்கு 19 புதிய நீதிபதிகள்! கொலிஜியம் ஒப்புதல்!
விடியோக்கள்

என்னைத் தெரியும் எனச் சொன்னால்! GET OUT சொல்லிடுங்க! அமைச்சர் ராஜ்மோகன் | TVK

Ravindran Duraisamy Interview | டார்கெட் செய்யப்படுகிறாரா திருமாவளவன் ? | CM Vijay | TVK | Thirumavalavan | VCK

150 பாலியல் வழக்குகள், 130 கொலைகள்! தவெக ஆட்சியை விமர்சித்த EPS | ADMK | TVK



