தில்லி அரசு மருத்துவமனைகளில் மருத்துவர்கள் தொடர்ந்து தாக்கப்படும் சம்பவங்களைத் தடுக்க, மருத்துவர்கள் அளிக்கும் சிகிச்சையின் தரம், மருத்துவர்களின் பணியிட நிலைமை ஆகியவை குறித்து ஆய்வு நடத்தலாம் என்று தில்லி உயர் நீதிமன்றம் யோசனை தெரிவித்துள்ளது.
தில்லியில் நோயாளிகளின் உறவினர்களால் அரசு மருத்துவர்கள் தாக்கப்படுவதைத் தடுப்பது தொடர்பான வழக்கில் தில்லி உயர் நீதிமன்றம் அவ்வப்போது உத்தரவுகளைப் பிறப்பித்து வருகிறது. இந்நிலையில் இந்த வழக்கு தில்லி உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி (பொறுப்பு) கீதா மித்தல், நீதிபதி சி. ஹரி சங்கர் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, தலைமை நீதிபதி அமர்வு, "தில்லியில் மத்திய அரசு, தில்லி அரசின் தலா ஒரு மருத்துவமனையை தேர்வு செய்து அதில், அளிக்கப்படும் சகிச்சையின் தரம், மருத்துவர்களின் பணியிட நிலைமை ஆகியவற்றை ஆய்வு செய்யப்பட வேண்டும்.
இந்த ஆய்வை மத்திய மருத்துவமனைகளின் அங்கீகார வாரியம் (என்ஏபிஎச்), இந்திய தரக் கவுன்சில் (கியுசிஐ) ஆகியவை மேற்கொள்ள வேண்டும். இந்த ஆய்வை மேற்கொள்ளவது தொடர்பான உத்தரவுகளைப் பிறப்பிக்க அந்த அமைப்புகளின் அதிகாரிகள், ஏப்ரல் 10-ஆம் தேதி நீதிமன்றத்தில் ஆஜராக வேண்டும் ' என்று தெரிவித்தது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜவுளி உற்பத்தி, வடிவமைப்புப் பயிற்சிக்கு இளைஞா்கள் விண்ணப்பிக்கலாம்!

நீட் வினாத்தாள் கசிவு: நீதிமன்றக் காவலில் உள்ள மூவரிடம் சிபிஐ விசாரிக்க அனுமதி!

பாலன் வன்முறைப் படமல்ல: இயக்குநர் சிதம்பரம்

மகாநதி தொடர் கடைசிநாள் படப்பிடிப்பில் கண்கலங்கி அழுத நடிகர்கள்!
விடியோக்கள்

”முதல்வர் விஜய்க்கு எந்த பயிற்சியும் தேவையில்லை”: அமைச்சர் ராஜ்மோகன் | TVK

2 வயது குழந்தைக்கு நல்லது கெட்டது தெரியாது!: துரை வைகோ பேட்டி

மின்வெட்டு பிரச்னையில் தவெக அரசு செய்வது என்ன?: சிஐடியு ஜெயசங்கர் | Power Outage |


