கவிஞர் கண்ணதாசன் சிலைக்கு தமிழக அரசு மரியாதை!திருச்செந்தூர் கோயிலில் தரிசன கட்டணம் உயர்த்தப்படவில்லை: அமைச்சர் ரமேஷ் விளக்கம்!தங்கம் சவரனுக்கு ரூ. 1,680 குறைந்தது! இன்றைய நிலவரம்நிறைமாத கர்ப்பிணிக்கு மேடையைவிட்டு இறங்கி பணி ஆணை வழங்கிய முதல்வர் விஜய்! 500 மின்சார பேருந்துகள் கொள்முதல் டெண்டரை ரத்து செய்தது தமிழக அரசு!ரவி மோகன் வீட்டில் ரூ.3 லட்சம் திருட்டு - போலீஸில் புகார்!ஈரான் போர்: அதிபர் டிரம்ப்க்கு எதிராக செனட் சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!திருவள்ளூர் அம்மோனியா வாயு கசிவு: பலியானோரில் 2 சிறுமிகள்!மத்திய அமைச்சரவையில் மாற்றம்? குடியரசுத் தலைவருடன் பிரதமா் சந்திப்புமத்திய அமைச்சா் நிா்மலா சீதாராமன் காஞ்சிபுரம் வருகைவட தமிழகத்தில் மிதமான மழைக்கு வாய்ப்பு!பொறியியல் மாணவா் சோ்க்கை தரவரிசைப் பட்டியல் ஜூலை 1இல் வெளியீடுஹஜ் பயணத்துக்கு ஜூலை 20-க்குள் விண்ணப்பிக்கலாம்!
/

பேரவையிலிருந்து கபில் மிஸ்ரா வெளியேற்றம்

தில்லி சட்டப்பேரவையில் அலுவல் காகிதத்தை கிழித்த ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ கபில் மிஸ்ரா பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.

Updated On :6 ஏப்ரல் 2018, 4:11 am IST

தில்லி சட்டப்பேரவையில் அலுவல் காகிதத்தை கிழித்த ஆம் ஆத்மி கட்சியின் அதிருப்தி எம்எல்ஏ கபில் மிஸ்ரா பேரவையிலிருந்து வெளியேற்றப்பட்டார்.
தில்லி சட்டப்பேரவையின் பட்ஜெட் கூட்டத் தொடர் நடைபெற்று வருகிறது. அவை தொடங்கியதும், பேரவையின் கேள்வி நேரம் தொடங்கியது. ராமநவமி என்ற பெயரில் மதக் கலவரத்தை தூண்ட முயற்சிப்பதாகத் தெரிவித்து பேரவையின் அலுவல் பட்டியலில் இடம் பெற்றிருந்த விவாதத்தை நீக்க ஆம் ஆத்மி அதிருப்தி உறுப்பினர் கபில் மிஸ்ரா வலியுறுத்தினார். இதற்கு பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல் ஆட்சேம் தெரிவித்தார்.
இதைத் தொடர்ந்து, அவையின் மையப் பகுதிக்கு வந்த கபில் மிஸ்ரா, தில்லியில் வகுப்புவாத கலவர சம்பவங்கள் நடைபெறாத போது, அது குறித்து ஆம் ஆத்மி உறுப்பினர்கள் விவாதிப்பது ஏன்? எனக் கேள்வி எழுப்பினார். 
அப்போது குறுக்கிட்ட பேரவைத் தலைவர் ராம் நிவாஸ் கோயல், "எனது தொகுதியான சாதராவில் இதுபோன்ற வகுப்புவாத கலவரம் நடைபெற்றுள்ளது. இது தொடர்பாக காவல்துறை வழக்குப் பதிவு செய்யவில்லை' என்றார்.
பின்னர், கபில் மிஸ்ராவை இருக்கைக்கு செல்லுமாறும், அவையின் அலுவலை தொடர்ந்து நடத்த உதவுமாறும் அறிவுறுத்தினார். அதற்கு செவிசாய்க்காத கபில் மிஸ்ரா அலுவல் காதிதத்தை கிழித்து எறிந்தார். இதைத் தொடர்ந்து அவரை வெளியேற்ற அவைக் காவலர்களுக்கு பேரவைத் தலைவர் உத்தரவிட்டார். இதையடுத்து, கபில் மிஸ்ரா அவையிலிருந்து வெளியேற்றப்பட்டார். அப்போது ஆளும்கட்சி உறுப்பினர்களுக்கும், அவருக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. 
பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு: இதே விவகாரம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் விஜேந்தர் குப்தா தலைமையில் பாஜக உறுப்பினர்கள் ஓ.பி. சர்மா, எம்.எஸ். சிர்ஸா, ஜெகதீஷ் பிரதான் உள்ளிட்டோர் அவையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். 
இதனிடையே, தில்லி சட்டப்பேரவை நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடரை மேலும் 2 நாள்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதற்கான முன்மொழிவு அவையில் குரல் வாக்கெடுப்பு மூலம் நிறைவேற்றப்பட்டது. இது இந்தக் கூட்டத்தொடரை மூன்றாவது முறையாக நீட்டிக்க  கொண்டுவரப்பட்ட முன்மொழிவாகும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.