குஜராத் மாநிலம், ஆமதாபாதில் உள்ள கர்னாவதி தமிழ்ச் சங்கத்தின் சார்பில் சித்திரைத் திருவிழா குசபாவ் தாத்ரே கலையரங்கத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்த விழாவில், "மனைவி கணவரிடம் அதிகம் எதிர்பார்ப்பது குணமா, பணமா, திறமையா? ' எனும் தலைப்பில் ஆடம்ஸின் அரட்டை அரங்கம் நடைபெற்றது. தில்லியைச் சேர்ந்த அறிவழகன், சத்யா அசோகன் ஆகியோர் நடுவர்களாக செயல்பட்டனர். தில்லி தமிழ்ச் சங்கத்தின் செயற்குழு உறுப்பினர் சாமுண்டீஸ்வரி மற்றும் மீனா வெங்கி, ரமேஷ் ஆகியோர் தில்லியிலிருந்தும், ஆமதாபாதில் இருந்து பலரும் பங்கேற்றனர்.
குருவை மதிக்கும் வகையில் ஆமதாபாத் தமிழ்ப் பள்ளிகளின் ஆசிரியர்கள் பலரும், கல்லூரி பேராசியர்களும் சிறப்பிக்கப்பட்டனர். ஏழை, எளிய மாணவர்களுக்கு கர்னாவதி தமிழ்ச் சங்கம் இலவசமாக பாடப்புத்தகங்கள் வழங்க இருப்பதாக நிகழ்ச்சியில் அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்றனர்.
நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை கர்னாவதி தமிழ்ச் சங்கத்தின் தலைவர் பாலாஜி, செயலாளர் முருகவேல் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் செய்திருந்தனர். நிகழ்ச்சியை தில்லி கலை, இலக்கிய பேரவையின் ஒருங்கிணைப்பாளர் பா.குமார் தொகுத்து வழங்கினார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
நன்றியுணர்வால் மனதை நிரப்புங்கள்!

11.5.1976: ஹிந்தி எதிர்ப்பு பென்ஷன் திட்டம் நிறுத்தப்பட்டது
நாளைய மின்தடை குடவாசல்

முதல்வா் விஜய்க்கு தருமபுரம் ஆதீனம் வாழ்த்து
விடியோக்கள்

கருப்பு டிரைலர்!
இணையதளச் செய்திப் பிரிவு

தவெக தொண்டர்கள் உற்சாகக் கொண்டாட்டம்! | CM Vijay | TVK |
தினமணி செய்திச் சேவை

கனிமொழியிடம் ராகுல் காந்தி பேசினாரா?: செல்வப்பெருந்தகை பேட்டி | DMK | Congress | TVK |
தினமணி செய்திச் சேவை
கோட்டையில் முதல்வர் நாற்காலியில் ஜோசப் விஜய்! | CM Vijay
தினமணி செய்திச் சேவை
