தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்கும் விவகாரம் தொடர்பாக மாநில அரசு தாக்கல் செய்த மேல் முறையீட்டு மனு மீதான விசாரணையை மே 16-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்திவைத்தது.
இது தொடர்பாக "வழக்குரைஞர் சமூக நீதிப் பேரவை' சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் கடந்த 2014-ஆம் ஆண்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை 2016, அக்டோபர் 26-இல் விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், தமிழகத்தில் வன்னியர் சங்க அறக்கட்டளை சார்பில் சரஸ்வதி சட்டக் கல்லூரி தொடங்க அனுமதி வழங்க மறுத்து தமிழக அரசு பிறப்பித்த உத்தரவை ரத்து செய்தது. மேலும், சட்டக் கல்லூரி தொடங்குவதற்கான அவர்களது விண்ணப்பத்தை 4 வாரங்களுக்குள் பரிசீலித்து தமிழ்நாடு டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் எனவும் தெரிவித்தது. ஆனால், இந்த உத்தரவு நிறைவேற்றப்படாததைத் தொடர்ந்து, வழக்குரைஞர் சமூக நீதி பேரவை சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் நீதிமன்ற அவமதிப்பு வழக்குத் தொடுக்கப்பட்டது.
இந்நிலையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவுக்கு எதிராகவும், நீதிமன்ற அவமதிப்பு வழக்குக்கு எதிராகவும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்தது. இந்த மனு மீதான விசாரணை உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது, தமிழகத்தில் தனியார் சட்டக் கல்லூரிகள் தொடங்கும் விவகாரத்தில், திண்டிவனத்தில் உள்ள வன்னியர் சங்க அறக்கட்டளையின் சரஸ்வதி சட்டக் கல்லூரியை ஆய்வு செய்து 3 வாரங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று இந்திய பார் கவுன்சிலுக்கு (பிசிஐ) உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.
இதனிடையே, தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு உச்ச நீதிமன்றத்தில் நீதிபதிகள் அருண் மிஸ்ரா, யு.யு.லலித் அமர்வில் புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, இந்திய பார் கவுன்சில் சார்பில் வழக்குரைஞர் அர்தேந்து மெளலி குமார் பிரசாத், "வழக்குரைஞர் சமூக நீதிப் பேரவை' சார்பில் வழக்குரைஞர்கள் கே. பாலு, ராமசந்திரன், தமிழக அரசு சார்பில் மூத்த வழக்குரைஞர் சுப்ரமணிய பிரசாத், யோகேஷ் கண்ணா உள்ளிட்டோர் ஆஜராகினர்.
அவர்கள் வாதிடுகையில், சட்டக் கல்வியின் தற்போதைய நிலை மாறி வரும் சூழலுக்கு ஏற்ப சட்டக் கல்வியில் செய்ய வேண்டிய மாற்றங்கள், தரமான சட்டக் கல்லூரிகள் தொடங்குவது ஆகியவை குறித்த அக்கறையையும் கவலையையும் வெளிப்படுத்தினர். இதைத் தொடர்ந்து, வன்னியர் சங்க அறக்கட்டளையின் சரஸ்வதி சட்டக் கல்லூரியை ஆய்வு செய்த அறிக்கை குறித்து நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். அப்போது, இந்திய பார் கவுன்சில் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் அர்தேந்துமெளலி குமார் பிரசாத் கல்லூரியை ஆய்வு செய்த அறிக்கையை சமர்பித்தார்.
இதைத் தொடர்ந்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு: வன்னியர் சங்க அறக்கட்டளையின் சரஸ்வதி சட்டக் கல்லூரியை ஆய்வு செய்த அறிக்கைக்கு ஒப்புதல் அளிப்பது தொடர்பாக இந்திய பார் கவுன்சில் சட்டக் குழுக் கூட்டத்தை விரைந்து கூட்ட வேண்டும். சட்டக் கல்லூரி அங்கீகாரம் தொடர்பாக டாக்டர் அம்பேத்கர் சட்டப் பல்கலைக்கழகம் ஆய்வு செய்து நீதிமன்றத்தில் அடுத்து விசாரணைக்குள்ளாக அளிக்க வேண்டும். சட்டக் கல்விப் பாடத் திட்டத்தில் உலகத் தர அளவில் மாற்றம் செய்வது குறித்தும், தனியார் சட்டக் கல்லூரிகளில் நிரந்தர ஆசிரியர்களை நியமிப்பது குறித்தும் விரிவான அறிக்கையை தாக்கல் செய்ய வேண்டும். வழக்கு விசாரணை மே 16-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது' என்று உத்தரவில் நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ஜூன் 14-இல் பி.எஸ்சி நா்சிங் படிப்புக்கான நுழைவுத் தேர்வு
வீட்டின் பூட்டை உடைத்து பித்தளைப் பொருள்கள் திருட்டு

கள்ளக்குறிச்சி மாவட்ட வேலைவாய்ப்பு மையத்தில் மே 22-இல் தனியாா் துறை வேலை வாய்ப்பு முகாம்

சங்கராபுரம் அருகே மழையில் முளைத்த நெல்மணிகள்: நெல் மூட்டைகள் அரசு கொள்முதல் செய்யாததால் விவசாயிகள் வேதனை
விடியோக்கள்

Podcast | அமைச்சர் ஆவார்களா அதிமுக எம்எல்ஏ-க்கள்? | News and Views | Epi - 35 | TVK | CM Vijay |
தினமணி செய்திச் சேவை

பாண்டியாவையும் பஞ்சாபையும் யாராவது காப்பாற்றுங்கள்! | Punjab Kings | Hardik Pandya |
தினமணி செய்திச் சேவை

Surya Come Back! கருப்பு படம் எப்படி இருக்கு? | Karuppu | RJB | Trisha | Sai Abhyankar
இணையதளச் செய்திப் பிரிவு

Karuppu Movie Review | பதினெட்டாம்படி நீதிபதி... சூர்யாவின் கருப்பு! | Trisha | RJB | Sai Abhyankkar
இணையதளச் செய்திப் பிரிவு
