மூன்று ஆண்டுகளில் அனைத்து மின்சார மீட்டர்களையும் ஸ்மார்ட் ப்ரீ பெய்டு மீட்டர்களாக மாற்ற மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான நடவடிக்கை வரும் ஏப்ரல் மாதத்தில் இருந்து தொடங்கப்பட உள்ளது.
இதுகுறித்து மத்திய மின் துறை அமைச்சக உயரதிகாரி திங்கள்கிழமை தெரிவித்ததாவது: மத்திய மின் துறை அமைச்சகம் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதியில் இருந்து மூன்று ஆண்டுகளில் அனைத்து மீட்டர்களையும் ஸ்மார்ட் ப்ரீ பெய்டு மீட்டர்களாக உருவாக்க முடிவு செய்துள்ளது.
இந்த நடவடிக்கையானது மின் பகிர்மானத்தில் மொத்த தொழில்நுட்ப மற்றும் வர்த்தக இழப்பைக் குறைப்பது, மின் விநியோக நிறுவனங்களின் ஆரோக்கிய நிலைமை, மின் சேமிப்புக்கான ஊக்குவிப்பு, பில்லுக்கான கட்டணங்கள் செலுத்துவதை எளிமைப்படுத்துவது, காகித பில் இல்லாத தன்மையை உருவாக்குவது ஆகியவை மூலம் மின் துறையில் புரட்சி ஏற்படுத்தக் கூடும்.
மேலும், இந்த நடவடிக்கை ஏழைகளுக்கு பயனளிக்கக் கூடியதாகும். அதாவது, நுகர்வோர் ஒரு மாதத்திற்கு மின்சாரக் கட்டணத் தொகையை ஒரே தடவையாக செலுத்தாமல் தங்களது தேவைக்கு ஏற்ப செலுத்த முடியும். மேலும், ஸ்மார்ட் ப்ரீ பெய்டு மீட்டர்கள் உற்பத்தியும் இளைஞர்களுக்கு திறன்மிக்க வேலைவாய்ப்பை உருவாக்கும். ஏற்கெனவே மாநில அரசுகள் தங்களது நுகர்வோருக்கு 24 மணி நேரமும் மின்விநியோகம் செய்வதற்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருப்பது நினைவுகூரத்தக்கது என்றார் அந்த அதிகாரி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
தில்லி தமிழ்நாடு இல்லத்தில் முதல்வர் விஜய்க்கு வரவேற்பு!

இன்றும் பேசப்படும் வலிமையான பெண் பாத்திரங்களை அமைத்த பாரதிராஜா!
தமிழர்களின் இதயங்களை வென்ற பாரதிராஜா ஒரு பார்வை..!

விசாகப்பட்டினம் எஃகு ஆலை விபத்து: 9 ஆக உயர்ந்த பலி!
விடியோக்கள்

பெண்களை தொந்தரவு செய்பவர்களுக்கு எச்சரிக்கை! முதல்வர் விஜய் SPEECH!

சாதிவாரிக் கணக்கெடுப்பு! முதல்வரைச் சந்தித்தது குறித்து அன்புமணி!

தவெகவுக்கான ஆதரவு செல்லும்! அதிமுக எம்எல்ஏக்கள் தகுதிநீக்கம் இல்லை! பேரவைத் தலைவர் பேட்டி


