எரிபொருள் தட்டுப்பாடு.. மத்திய அரசு என்ன செய்யப் போகிறது? முதல்வர் ஸ்டாலின் கேள்வி!வைரமுத்துவுக்கு ஞானபீட விருது!பதவி உயர்வு வேண்டுமா? அக்செஞ்சர் தலைமை செயல் நிர்வாகி சொல்வது என்ன?உணவகங்கள், டீக்கடைகளுக்கு மின்சார மானியம்: தமிழக அரசின் அதிரடி அறிவிப்புசிலிண்டர் தட்டுப்பாடு! தமிழக அரசின் முக்கிய அறிவிப்புகள் என்னென்ன?விளம்பர வெறிக்கு சிறுவர்களா? வெட்கமாக இல்லையா? அண்ணாமலை கேள்வி! ஈரான் தாக்குதலில் 5 அமெரிக்க டேங்கர் விமானங்கள் சேதம்!வேளச்சேரி - பரங்கிமலை ரயில் சேவை தொடங்கியது!
/

நிர்பயா தீர்ப்பு : ஸ்வாதி மாலிவால் வரவேற்பு 

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்ததுடன், 3 பேரின் மறு ஆய்வு மனுவையும் தள்ளுபடி செய்து

News image
Updated On :9 ஜூலை 2018, 7:18 pm

DIN

நிர்பயா வழக்கில் குற்றவாளிகளுக்கு வழங்கப்பட்ட தூக்கு தண்டனையை உறுதி செய்ததுடன், 3 பேரின் மறு ஆய்வு மனுவையும் தள்ளுபடி செய்து உச்ச நீதிமன்றம் திங்கள்கிழமை வழங்கிய தீர்ப்பை தில்லி மகளிர் ஆணையத் தலைவி ஸ்வாதி மாலிவால் வரவேற்றுள்ளார்.
இது தொடர்பாக அவர் தில்லியில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: இந்த தீர்ப்புக்கு ஒட்டுமொத்த இந்தியாவும் நன்றிக் கடன்பட்டுள்ளது. குற்றவாளிகளின் மரண தண்டனை உடனடியாக நிறைவேற்றப்பட வேண்டும். பெண்கள், சிறுமிகளை பாலியல் வன்கொடுமைக்கு உள்படுத்துபவர்களுக்கு காலதாமதம் இல்லாமல் மரண தண்டனை வழங்கப்பட வேண்டும். குற்றவாளிகளுக்கு மரண தண்டனையை நிறைவேற்றினால் மட்டுமே நிர்பயாவுக்கு நீதி கிடைக்கும் என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.