தில்லியில் மின் அளவை ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம் திட்டத்தை இம்மாதத்தில் தொடங்க மின் விநியோக நிறுவனமான டாடா பவர் தில்லி டிஸ்ட்ரிபுஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சஞ்சய் பங்கா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தலைநகர் தில்லியில் டிபிடிடிஎல் நிறுவனம் சுமார் 16 லட்சம் நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், அவர்களுக்கு மின் அளவை ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் இம்மாதம் தொடங்கப்படவுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் 5 லட்சம் மின் அளவை ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ்நேர மின் பயன்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில், செல்லிடப்பேசி செயலியையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக வடக்கு தில்லி, வட மேற்கு தில்லியில் 2 லட்சம் மின் அளவை ஸ்மார்ட் மீட்டர்களை அடுத்த ஓராண்டுக்குள் பொருத்தவதற்கு திட்டமிட்டுள்ளோம். 2025-ஆம் ஆண்டுக்குள் 16 லட்சம் மின் அளவை ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்துக்கும், நுகர்வோருக்கு பயன் ஏற்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
மின்மாற்றியில் பொருள்கள் திருட்டு

தீத்தொண்டு நாள் வார விழா

வாக்குச்சாவடி அலுவலா்களுக்கு பயிற்சி
வியாபாரியை தாக்கி பணம் பறித்த வழக்கு: மேலும் ஒருவா் கைது
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

