மின் அளவை ஸ்மார்ட் மீட்டர் திட்டம் விரைவில் தொடக்கம்
தில்லியில் மின் அளவை ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம் திட்டத்தை இம்மாதத்தில் தொடங்க மின் விநியோக நிறுவனமான டாடா பவர் தில்லி டிஸ்ட்ரிபுஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) அறிவித்துள்ளது.


தில்லியில் மின் அளவை ஸ்மார்ட் மீட்டர் பொருத்தம் திட்டத்தை இம்மாதத்தில் தொடங்க மின் விநியோக நிறுவனமான டாடா பவர் தில்லி டிஸ்ட்ரிபுஷன் லிமிடெட் (டிபிடிடிஎல்) அறிவித்துள்ளது.
இது குறித்து அந்நிறுவனத்தின் தலைமைச் செயல் அலுவலர் சஞ்சய் பங்கா ஞாயிற்றுக்கிழமை கூறியதாவது: தலைநகர் தில்லியில் டிபிடிடிஎல் நிறுவனம் சுமார் 16 லட்சம் நுகர்வோருக்கு மின் விநியோகம் செய்து வருகிறது. இந்நிலையில், அவர்களுக்கு மின் அளவை ஸ்மார்ட் மீட்டர் பொருத்தும் திட்டம் இம்மாதம் தொடங்கப்படவுள்ளது. அடுத்த 2 ஆண்டுகளில் 5 லட்சம் மின் அளவை ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், நிகழ்நேர மின் பயன்பாட்டை அறிந்து கொள்ளும் வகையில், செல்லிடப்பேசி செயலியையும் அறிமுகப்படுத்தத் திட்டமிட்டுள்ளோம். முதல் கட்டமாக வடக்கு தில்லி, வட மேற்கு தில்லியில் 2 லட்சம் மின் அளவை ஸ்மார்ட் மீட்டர்களை அடுத்த ஓராண்டுக்குள் பொருத்தவதற்கு திட்டமிட்டுள்ளோம். 2025-ஆம் ஆண்டுக்குள் 16 லட்சம் மின் அளவை ஸ்மார்ட் மீட்டர்களை பொருத்துவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் நிறுவனத்துக்கும், நுகர்வோருக்கு பயன் ஏற்படும் என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...
தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...