தில்லியில் மின் கட்டணம் குறைக்கப்பட்டுள்ளதாக தில்லி அரசு கூறுவது ஒரு ஏமாற்று வேலை என்று பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி தெரிவித்தார்.
இது குறித்து பாஜகவின் தில்லி தலைவர் மனோஜ் திவாரி வியாழக்கிழமை கூறியதாவது: புதிய மின்கட்டண முறையில் மின் கட்டண மீட்டர்களுக்கான நிலையான கட்டண தொகை உயர்த்தப்பட்டுள்ளது. இதனால், மானிய முறையில் மின்சாரம் பயன்படுத்தும் ஏழை மக்கள் பாதிக்கப்படுவர். புதிய கட்டணத்தின்படி, 150 யூனிட்டுகள் வரை பயன்படுத்துபவர்களுக்கு மின்சாரக் கட்டணம் அதிகரிக்கவுள்ளது. 400 யூனிட்டுகளுக்கு மேல் பயன்படுத்துபவர்களுக்கு மின்சாரக் கட்டணம் குறையவுள்ளது. ஏழை, நடுத்தர மக்கள் 150 யூனிட் வரையே மின்சாரத்தை பயன்படுத்துவர். அவர்கள் 400 யூனிட்டுகளுக்கு மேல் மின்சாரம் பயன்படுத்த வாய்ப்பில்லை. எனவே, இது ஏழைகளின் வயிற்றில் அடிக்கும் செயலாகும். இது ஒரு ஏமாற்று வேலையாகும்.
மூன்று ஆண்டுகளுக்கு முன்பு மின் கட்டணத்தை 50 சதவீதம் குறைப்பதாகக் கூறி ஆட்சிக்கு வந்த கேஜரிவால், மக்களை ஏமாற்றி விட்டார். தில்லி அரசு வழங்கும் மானியத் தொகையால் மின் உற்பத்தி நிறுவனங்களே லாபமடைகின்றன. மின் உற்பத்தி நிறுவனத்துக்கு வழங்கப்பட்ட ரூ.6,000 கோடி மானியத் தொகையில் மிகப் பெரிய ஊழல் நடந்துள்ளது என்றார் அவர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேயோன் எரிமலை வெடிப்பு! சுற்றியுள்ள 6 கி.மீ. பகுதிகள் ஆபத்தானவையாக அறிவிப்பு! | Philippines
வெற்றிலை சர்பத்

குட்டித் தூக்கம் போடுபவர்களுக்காக போட்டி நடத்திய தென் கொரியா!

நமன் திர் அரைசதம்; சிஎஸ்கேவுக்கு 160 ரன்கள் இலக்கு!
வீடியோக்கள்

வாக்கு எண்ணிக்கை; TVK சார்பில் வைக்கப்பட்ட வேண்டுகோள்கள்! | Aadhav Arjuna | Vijay
இணையதளச் செய்திப் பிரிவு

Thiruma திடீர் விடியோ உண்மைப் பின்னணி ! உடைத்துப் பேசும் ரவீந்திரன் துரைசாமி | VCK
இணையதளச் செய்திப் பிரிவு

"விசிகவினர் சிறப்பாக பணியாற்றவில்லை!" திருமா வெளியிட்ட பரபரப்பு விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

#ipl2026 | CSK vs MI: யாருக்கு வெற்றி வாய்ப்பு? | Chennai Super Kings | Mumbai Indians |
தினமணி செய்திச் சேவை

