பயங்கரவாதத்துக்கு எதிராக அன்றும், இன்றும் நாடு ஒன்றுபட்டு நிற்கிறது! ராகுல் தமிழ்நாடு பேரவைத் தேர்தலில் 4.18 லட்சம் தபால் வாக்குகள் பதிவு!தமிழ்நாட்டில் இதுவரை ரூ. 1,262 கோடி பறிமுதல்! தேர்தல் ஆணையம் பங்குச்சந்தை வீழ்ச்சி! சென்செக்ஸ் 500 புள்ளிகள் குறைந்தது!ஈரானுக்கு எதிரான தற்காலிக போர்நிறுத்தம் நீட்டிப்பு: டிரம்ப்
/

ஏடிஎம் மோசடி: இருவரை பிடித்து கொடுத்த பாதுகாப்பு படை வீரர்

தில்லியில் ஏடிஎம் மோசடியில் ஈடுபட்ட இருவரை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தார்.

Updated On :3 செப்டம்பர் 2018, 7:25 pm

தில்லியில் ஏடிஎம் மோசடியில் ஈடுபட்ட இருவரை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தில்லி காவல் துறை துணை ஆணையர் (தெற்கு) விஜய் குமார் திங்கள்கிழமை கூறியதாவது:
சங்கம் விஹார் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை பணம் எடுத்துள்ளார். அப்போது திடீரென உள்ளே நுழைந்த இருவர் ஏடிஎம்மின் பொத்தனை அழுத்தியுள்ளனர். இதனால் ஏடிஎம் அப்படியே செயல்படாமல் நின்றுவிட்டது. எனினும், அந்த பாதுகாப்பு படை வீரரின் செல்லிடப்பேசிக்கு ரூ. 10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுவிட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது. 
அதைக் கண்டவுடன், சந்தேகம் அடைந்த அந்த வீரர் இருவரையும் பிடித்து விசாரித்துள்ளார். அவர்கள் தப்பிக்க முயன்றதால் அவர்களைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அன்கிட் (23), குல்ஷன் (22) ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து 7 ஏடிஎம் கார்டுகள், ரூ. 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.