தில்லியில் ஏடிஎம் மோசடியில் ஈடுபட்ட இருவரை பாதுகாப்பு படை வீரர் ஒருவர் பிடித்து காவல் துறையிடம் ஒப்படைத்தார்.
இந்தச் சம்பவம் தொடர்பாக தில்லி காவல் துறை துணை ஆணையர் (தெற்கு) விஜய் குமார் திங்கள்கிழமை கூறியதாவது:
சங்கம் விஹார் பகுதியில் உள்ள ஏடிஎம் ஒன்றில் எல்லைப் பாதுகாப்பு படை வீரர் ஒருவர் ஞாயிற்றுக்கிழமை பணம் எடுத்துள்ளார். அப்போது திடீரென உள்ளே நுழைந்த இருவர் ஏடிஎம்மின் பொத்தனை அழுத்தியுள்ளனர். இதனால் ஏடிஎம் அப்படியே செயல்படாமல் நின்றுவிட்டது. எனினும், அந்த பாதுகாப்பு படை வீரரின் செல்லிடப்பேசிக்கு ரூ. 10 ஆயிரம் பணம் எடுக்கப்பட்டுவிட்டதாக குறுந்தகவல் வந்துள்ளது.
அதைக் கண்டவுடன், சந்தேகம் அடைந்த அந்த வீரர் இருவரையும் பிடித்து விசாரித்துள்ளார். அவர்கள் தப்பிக்க முயன்றதால் அவர்களைப் பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தார். இது தொடர்பாக காவல் நிலையத்தில் புகாரும் அளித்தார். அதன் அடிப்படையில் கைது செய்யப்பட்ட அன்கிட் (23), குல்ஷன் (22) ஆகியோரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், தங்களின் குற்றத்தை ஒப்புக் கொண்டனர். அவர்களிடம் இருந்து 7 ஏடிஎம் கார்டுகள், ரூ. 10 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்க முதல் கட்டத் தேர்தல்: ஏற்பாடுகள் தீவிரம்! வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பிவைப்பு!

"Get Out Of Here!" பாஜக பேரணியால் போக்குவரத்து நெரிசல்!அமைச்சரைத் திட்டிய பெண்ணால் பரபரப்பு!

ஒடிசாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகள் மீது தாக்குதல்!
எதிர்காலம் எழுகிறது! வைரலாகும் விஜய் பாதுகாவலர் பதிவு!
வீடியோக்கள்

#tnelections2026 | பெண்கள் வாக்கு யாருக்கு? மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் நேர்காணல் | BJP | DMK | TVK
தினமணி செய்திச் சேவை

தமிழ்நாட்டை மீண்டும் ஆளத் தகுதி படைத்த MK Stalin! | kamal வெளியிட்ட விடியோ!
இணையதளச் செய்திப் பிரிவு

TVK விஜய்க்கு வெற்றி வாய்ப்பு எப்படி? | TN Election 2026 | TVK Vijay | DMK | ADMK | NTK | TVk
தினமணி செய்திச் சேவை

நான் என்னைக்குமே Danger-தான்! - 5 ஆண்டுகால பணிகள் குறித்து M.K. Stalin
இணையதளச் செய்திப் பிரிவு

