தெற்கு தில்லியில் கோயில் வளாகத்தில் 15 வயது சிறுமியிடம் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாக சாமியாரை போலீஸார் கைது செய்தனர்.
இது குறித்து தெற்கு தில்லி காவல் துறை துணை ஆணையர் விஜய் குமார் திங்கள்கிழமை கூறியதாவது:
தில்லியைச் சேர்ந்தவர் நாப்பே பகத் (42). தன்னை சாமியார் எனக் கூறிக் கொள்ளும் இவர், தெற்கு தில்லி, ஃபதேபூர் பேரியில் உள்ள கோயில் ஒன்றை பராமரித்து வருகிறார். இவரிடம் சம்பவத்தன்று பெண் ஒருவர் தனது மகன் நோய் குணமாக வேண்டி சாமியாரிடம் சென்றார். அப்போது, 15 வயது உறவுக்காரச் சிறுமியும் உடன் சென்றார்.அச்சிறுமியிடம் சாமியார் பாலியல் துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும், இதைத் தட்டிக் கேட்ட அப்பெண்ணை சாமியார் கொன்றுவிடுவதாக மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்து நாப்பே பகத் போலீஸில் புகார் அளித்தார். இதையடுத்து, ஆகஸ்ட் 30-ஆம் தேதி நாப்பே பகத் கைது செய்யப்பட்டதாகவும், அவரிடம் விசாரணை நடைபெற்று வருவதாகவும் அதிகாரி விஜய் குமார் தெரிவித்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

செங்கல்பட்டில் அதிமுக வாக்கு சேகரிப்பு

அச்சிறுபாக்கத்தில் திமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

தோ்தல் அலுவலா்களுக்கான பயிற்சி வகுப்பு: ஆட்சியா் ஆய்வு

ஸ்ரீபெரும்புதூா் அதிமுக வேட்பாளா் வாக்கு சேகரிப்பு
வீடியோக்கள்

#ipl2026 | சிங்க நடைபோடும் சிஎஸ்கே: அடுத்து சன்ரைசர்ஸ்தான்! | Chennai Super Kings | Noor Ahmed |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையில் யார் சொல்வது உண்மை ? | Delimitation | MK Stalin | Annamalai | BJP | DMK
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையை எதிர்த்து நாளை தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி ஏற்றும் போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு

ராத்து ராசன் பாடல்!
இணையதளச் செய்திப் பிரிவு

