பிளாஸ்டிக் பயன்பாட்டுக்கு எதிராக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், வடக்கு தில்லி மாநகராட்சி (என்டிஎம்சி) பகுதிகளில் தெரு நாடகங்கள் நடத்தப்படவுள்ளதாக அந்த மாநகராட்சி அறிவித்துள்ளது.
இது தொடர்பாக என்டிஎம்சி அதிகாரிகள் கூறியதாவது:
பிளாஸ்டிக் பயன்பாடு அதிகரிப்பே உலகளவில் டெங்கு அதிகரிக்கக் காரணம் எனக் கண்டறியப்பட்டுள்ளது. பிளாஸ்டிக் பயன்பாட்டைக் குறைத்தால் டெங்கு நோய் பரவுவதைக் கட்டுப்படுத்தலாம் என வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். என்டிஎம்சி பகுதிகளில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கும் வகையில் பல செயல்திட்டங்களை மேற்கொண்டு வருகிறோம். அந்த வகையில், மாநகராட்சி ஊழியர்கள் வீடுவீடாகச் சென்று பிளாஸ்டிக் பயன்பாட்டால் ஏற்படும் தீமைகள் தொடர்பாக பிரசாரம் செய்து வருகின்றனர். மேலும், பிளாஸ்டிக் பயன்பாட்டின் தீமைகளைக் விளக்கிக் கூறும் வகையில் விழிப்புணர்வுத் தட்டிகள் மாநகராட்சிப் பகுதிகளில் வைக்கப்பட்டுள்ளன.
பிளாஸ்டிக்கின் தீமைகளை மக்களுக்குத் தெரியப்படுத்தும் வகையில் என்டிஎம்சி பகுதிகளில் தெரு நாடகங்கள் நடத்தவுள்ளோம். தில்லியில் உள்ள பிரபலமான நாடகக் குழுக்கள் இந்த தெரு நாடகங்களை நடத்தவுள்ளன. தில்லியில் உள்ள கல்லூரி நாடகக் குழுக்களை பயன்படுத்துவது தொடர்பாகவும் ஆலோசித்து வருகிறோம் என அந்த அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மண்டபம் அருகே பைக்குகள் மோதல்: சிறுமி உள்பட மூவா் உயிரிழப்பு

வாக்கு சேகரிப்பின்போது குழந்தைக்கு பெயா் சூட்டிய நாமக்கல் தவெக வேட்பாளா்!
பிரசாரத்தின் போது ஒருவா் மீது தாக்குதல்: 2 போ் கைது

தருமபுரியில் இன்று தவெக தலைவா் விஜய் பரப்புரை ரத்து
வீடியோக்கள்
அமைதிப் பேச்சுவார்த்தை தோல்வி! அடுத்தது என்ன?
இணையதளச் செய்திப் பிரிவு
Delhi Vs Chennai | முதல்வரின் சிறுபிள்ளைத்தனம்! அண்ணாமலை Press Meet | BJP | DMK
இணையதளச் செய்திப் பிரிவு

காட்ஸ் அண்ட் சோல்ஜர்ஸ் டீசர்!
இணையதளச் செய்திப் பிரிவு

டார்லிங் மறுவெளியீட்டு டிரைலர்!
தினமணி செய்திச் சேவை

