சுய உதவிக் குழுக்களுக்கு ஊக்கத் தொகை: ஊரக வளர்ச்சித் துறைக்கு வெளியிடப்பட்ட அறிவிப்புகள்!தொகுப்பூதிய ஆசிரியர்களின் ஊதியம் ரூ.25,000 ஆக உயர்வு: கலை பண்பாட்டுத் துறைக்கு வெளியிட்ட அறிவிப்புகள்!5 மாதங்களில் 1.95 லட்சம் இன்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் கணக்குகள் முடக்கம்! வாகனம் இல்லாத எம்எல்ஏக்களுக்கு முதல்வர் சொந்த செலவில் வாங்கித் தரலாம்! - டிடிவி தினகரன்டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 2 காசுகள் சரிந்து ரூ. 95.76 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: நிஃப்டி தொடர்ந்து 7 வது நாளாக சரிவு! 326 புள்ளிகளை இழந்த சென்செக்ஸ்!!ஒரு நபருக்கு 9 சிம் கார்டுகள் மட்டுமே அனுமதி! விதிமுறைகளை கடுமையாக்கிய மத்திய அரசு!
/

மயூர் விஹார் பேஸ்-3 கோயிலில் விநாயகர் சதுர்த்தி உத்ஸவம்

தில்லி மயூர் விஹார் பேஸ் 3-இல் உள்ள ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி உத்ஸவம் திங்கள்கிழமை (செப்டம்பர் 3) தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Updated On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

தில்லி மயூர் விஹார் பேஸ் 3-இல் உள்ள ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி உத்ஸவம் திங்கள்கிழமை (செப்டம்பர் 3) தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 
இதையொட்டி, செப்டம்பர் 9 முதல் 12-ஆம் தேதி வரை வேத விற்பன்னர்களின் சிறப்பு கணபதி ஹோமம் நடைபெற உள்ளது. காலையிலும், மாலையிலும் பக்தர்களின் நன்மைக்காக 8 வேத பண்டிதர்களால் சிறப்பு வேத பாராயணம் நடைபெறும். அருள்மிகு இஷ்ட சித்தி விநாயகருக்கு செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கிய லட்சார்ச்சனை செப்டம்பர் 13-ஆம் தேதி முடிவடைகிறது. செப்டம்பர் 9-ஆம் தேதி காலை 7.30 மணி முதல் காலை 10.30 மணி வரை விஜய கணபதி ஹோமம், லட்சுமி கணபதி ஹோமம், ஏகவார ருத்ராபிஷேகம் நடைபெறும். செப்.10 முதல் 12-ஆம் தேதி வரை காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை அதர்வஷீச ஹோமம், துர்கா கணபதி ஹோமம், அர்க்க கணபதி ஹோமம் நடைபெறும்.  செப்.13-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி நாளில் காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமமும், காலை 10 மணிக்கு மோதக சஹஸ்ரநாம அர்ச்சனையும், மாலை 5.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், இரவு 8.45 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறும். 
செப். 14-ஆம் தேதி மாலையில் இசைக் கலைஞர் அம்பிகா ஸ்ரீகாந்தின் மாணவர்கள் பங்கேற்கும் பக்தி இசை நிகழ்ச்சியும், செப்.15-ஆம் தேதி மாலையில் ருக்மணி மற்றும் குழுவினர் பங்கேற்கும் மகளிர் கோலாட்டம் நிகழ்ச்சியும் நடைபெறும். செப்.9 முதல் 12-ஆம் தேதி வரை ராஜ்சேகர ஸ்ரௌத்திகள்தலைமையிலான வேத பண்டிதர்கள் பங்கேற்கும் சதுர் வேத பாராயணம் நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் 8 மணிவரை நடைபெறும். செப்டம்பர் 16-ஆம் தேதி விநாயகரின் உத்ஸவர் ஊர்வலம் மாலை 6.30 மணிக்கு நடைபெறும். செப். 9 முதல் 16-ஆம் தேதி வரை தினமும் சிறப்பு அலங்காரங்களில் விநாயகர் அருள்பாலிக்க உள்ளார். இத்தகவலை ஸ்ரீஆதி சங்கர சேவா சமாஜத்தின் தலைவர் எஸ்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.