கோவை, நீலகிரி மாவட்டங்களில் இன்றும் நாளையும் பலத்த மழைக்கு வாய்ப்புஎம்பிபிஎஸ், பிடிஎஸ் கலந்தாய்வு: கல்லூரிகள் தோ்வு இன்று நிறைவுவீடுகளில் எல்பிஜிக்கு பதிலாக குழாய்வழி சமையல் எரிவாயு: மாநிலங்கள் முன்னுரிமை அளிக்க மத்திய அரசு வலியுறுத்தல்எத்தனால் உற்பத்தி அதிகரிப்பால் சா்க்கரை விலை உயா்வு: மத்திய அரசு மீது மாா்க்சிஸ்ட் குற்றச்சாட்டுஆபரேஷன் சிந்தூா் எதிரொலி: விசா சிக்கல்களுக்குப் பிறகு இந்தியா வந்தடைந்த 150 பாகிஸ்தான் மணப்பெண்கள்!

மயூர் விஹார் பேஸ்-3 கோயிலில் விநாயகர் சதுர்த்தி உத்ஸவம்

தில்லி மயூர் விஹார் பேஸ் 3-இல் உள்ள ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி உத்ஸவம் திங்கள்கிழமை (செப்டம்பர் 3) தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது.

Published On :30 ஜனவரி 2024, 10:11 pm IST

தில்லி மயூர் விஹார் பேஸ் 3-இல் உள்ள ஸ்ரீ இஷ்ட சித்தி விநாயகர் கோயிலில் விநாயகர் சதுர்த்தி உத்ஸவம் திங்கள்கிழமை (செப்டம்பர் 3) தொடங்கியது. இந்த நிகழ்ச்சி வரும் செப்டம்பர் 16-ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. 
இதையொட்டி, செப்டம்பர் 9 முதல் 12-ஆம் தேதி வரை வேத விற்பன்னர்களின் சிறப்பு கணபதி ஹோமம் நடைபெற உள்ளது. காலையிலும், மாலையிலும் பக்தர்களின் நன்மைக்காக 8 வேத பண்டிதர்களால் சிறப்பு வேத பாராயணம் நடைபெறும். அருள்மிகு இஷ்ட சித்தி விநாயகருக்கு செப்டம்பர் 3-ஆம் தேதி தொடங்கிய லட்சார்ச்சனை செப்டம்பர் 13-ஆம் தேதி முடிவடைகிறது. செப்டம்பர் 9-ஆம் தேதி காலை 7.30 மணி முதல் காலை 10.30 மணி வரை விஜய கணபதி ஹோமம், லட்சுமி கணபதி ஹோமம், ஏகவார ருத்ராபிஷேகம் நடைபெறும். செப்.10 முதல் 12-ஆம் தேதி வரை காலை 6.30 மணி முதல் 9.30 மணி வரை அதர்வஷீச ஹோமம், துர்கா கணபதி ஹோமம், அர்க்க கணபதி ஹோமம் நடைபெறும்.  செப்.13-ஆம் தேதி விநாயகர் சதுர்த்தி நாளில் காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமமும், காலை 10 மணிக்கு மோதக சஹஸ்ரநாம அர்ச்சனையும், மாலை 5.30 மணிக்கு மூலவருக்கு சிறப்பு அலங்காரமும், இரவு 8.45 மணிக்கு மகா தீபாராதனையும் நடைபெறும். 
செப். 14-ஆம் தேதி மாலையில் இசைக் கலைஞர் அம்பிகா ஸ்ரீகாந்தின் மாணவர்கள் பங்கேற்கும் பக்தி இசை நிகழ்ச்சியும், செப்.15-ஆம் தேதி மாலையில் ருக்மணி மற்றும் குழுவினர் பங்கேற்கும் மகளிர் கோலாட்டம் நிகழ்ச்சியும் நடைபெறும். செப்.9 முதல் 12-ஆம் தேதி வரை ராஜ்சேகர ஸ்ரௌத்திகள்தலைமையிலான வேத பண்டிதர்கள் பங்கேற்கும் சதுர் வேத பாராயணம் நிகழ்ச்சி மாலை 6 மணி முதல் 8 மணிவரை நடைபெறும். செப்டம்பர் 16-ஆம் தேதி விநாயகரின் உத்ஸவர் ஊர்வலம் மாலை 6.30 மணிக்கு நடைபெறும். செப். 9 முதல் 16-ஆம் தேதி வரை தினமும் சிறப்பு அலங்காரங்களில் விநாயகர் அருள்பாலிக்க உள்ளார். இத்தகவலை ஸ்ரீஆதி சங்கர சேவா சமாஜத்தின் தலைவர் எஸ்.கிருஷ்ணசாமி தெரிவித்துள்ளார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.