குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

மக்களவையில் மத்திய அரசுக்கு நாமக்கல் எம்.பி. பாராட்டு

நடுத்தர மக்களின் வரிச் சுமையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மக்களவையில்

Updated On :14 பிப்ரவரி 2019, 1:20 am IST

நடுத்தர மக்களின் வரிச் சுமையை குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது என்று மக்களவையில் நாமக்கல் தொகுதி அதிமுக உறுப்பினர் பி.ஆர்.சுந்தரம் பாராட்டிப் பேசினார். 
மக்களவையில் திங்கள்கிழமை "நிதி மசோதா 2019' மீதான விவாதத்தில் அவர் பேசியதாவது: ஏழை, எளிய நடுத்தர வர்க்கத்தினருக்கு வரிச்சலுகை மற்றும் வரி குறைப்பு, வீட்டு வசதி மற்றும் கட்டுமானத் துறைக்கு வரிச் சலுகைகள் போன்ற எதிர்பார்ப்புகள் இருந்தன. இந்நிலையில், மத்திய இடைக்கால பட்ஜெட் முக்கிய எதிர்பார்ப்புகளை நிறைவு செய்துள்ளது.
மேலும், 2019-ஆம் ஆண்டுக்கான நிதி மசோதாவில் வருமான வரிச் சட்டத்தில் பல சிறப்பான மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அதன்படி, 2019-20-ஆம் ஆண்டில் தற்போதுள்ள வருமான வரிக்கு குறியீடுகள் தொடரும். அதேவேளையில், வருமான வரி செலுத்துவோருக்கு நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது. இதனால், வரி செலுத்துவோரிடம் பணப்புழக்கம் அதிகரித்து வாழ்வாதாரம் மேம்படும். 
இந்த நிதி மசோதா மூலம் தற்போது ஒரு வீடு வைத்துள்ள வருமான வரி செலுத்துவோருக்கு இரண்டு வீடுகள் வரை வைத்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. வருமான வரிச் சட்டத்தில் ஷரத்து 54-இல் திருத்தம் செய்ததன் மூலம் வருமான வரி செலுத்துவோருக்கு நீண்ட கால மூலதன லாபத்தில் ரூ.2 கோடி வரை வரி நிவாரணம் வழங்கப்பட்டுள்ளது.
வருமான வரிச் சட்டத்தில் ஷரத்து 87ஏ-இல் திருத்தம் செய்யப்பட்டு ஆண்டு வருமானம் ரூ.5 லட்சம் வரை உள்ளவர்களுக்கு வரித் தள்ளுபடி தற்போது ரூ.2,500-இல் இருந்து ரூ.12,500 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. 
நடுத்தர மக்களின் வரிச் சுமையைக் குறைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது. வருமான வரி செலுத்துவோரின் எண்ணிக்கை இரு மடங்கு அதிகரித்துள்ளது. வரி வருவாய் ரூ. 6.38 லட்சம் கோடியில் இருந்து ரூ.12 லட்சம் கோடியாக எட்டியுள்ளது. தமிழக முதல்வர் கூறியுள்ளபடி, இந்த இடைக்கால பட்ஜெட் விவசாயிகளின், மக்களின் நலனுக்கான பட்ஜெட்டாகும். தமிழகத்திலும் பிப்ரவரி 8-ஆம் தேதி ஒரு சீரிய பட்ஜெட் தமிழக துணை முதல்வரால் தாக்கல் செய்யப்பட்டுள்ளது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.