தமிழகத்தில் மே 23 வரை மிதமான மழைக்கு வாய்ப்பு!ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்! தடை விதிக்கும் ஈரான்!நள்ளிரவில் ரஷியா மீது தாக்குதல் நடத்திய 500 உக்ரைன் ட்ரோன்கள்! கேரள முதல்வர் பதவியேற்பு விழா: கார்கே, ராகுல் காந்தி பங்கேற்கின்றனர்! ஹோர்முஸ் நீரிணை வழியாக ராணுவ உபகரணங்கள்: தடை விதிக்கும் ஈரான்! உள்நோக்கத்தோடு அவதூறு பரப்புகிறார் அமைச்சர் கீர்த்தனா: தங்கம் தென்னரசு கண்டனம்நாட்டின் தொழில் துறை வளர்ச்சியில் குஜராத்திற்கு முக்கியப் பங்கு: அமித் ஷாமே 20இல் அமேதி செல்லும் ராகுல் காந்தி!டாஸ்மாக் கடைகள் இரவு 10 மணிக்குள் மூட வேண்டும்: சென்னை காவல் ஆணையர்ரஜினியுடன் போட்டிதான், பொறாமை கிடையாது: கமல்ஹாசன்
/

விதிமுறைகளை மீறும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை: கேஜரிவால் எச்சரிக்கை

புதை சாக்கடையில் பாதுகாப்பற்ற முறையில் தொழிலாளர்களை இறங்குமாறு

Updated On :23 ஜனவரி 2019, 11:23 pm IST

புதை சாக்கடையில் பாதுகாப்பற்ற முறையில் தொழிலாளர்களை இறங்குமாறு நிர்பந்திக்கும் ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் எச்சரிக்கை விடுத்துள்ளார். 
வடக்கு தில்லி, வாஜிராபாத் அருகே திமர்பூரில் புதை சாக்கடையில் இறங்கிய ஒப்பந்தத் துப்புரவுப் பணியாளர் கிஷான்(37) கடந்த ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தார். 
இந்நிலையில், உயிரிழந்த துப்புரவுத் தொழிலாளி கிஸானின் குடும்பத்தினரை முதல்வர் கேஜரிவால் புதன்கிழமை நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார். மேலும், அவரது குடும்பத்துக்கு இழப்பீட்டுத் தொகை ரூ.10 லட்சமும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வாய்ப்பும் வழங்கப்படும் என்று கேஜரிவால் உறுதி அளித்தார்.
உயிரிழந்த தொழிலாளியின் குடும்பத்தினரை மாலையில் தில்லி காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் ஷீலா தீட்சித் சந்திக்கப்போவதாக அறிவித்திருந்த நிலையில், புதன்கிழமை மதியம் முதல்வரின் இந்தச் சந்திப்பு நடந்தது. பின்னர் செய்தியாளர்களிடம் கேஜரிவால் கூறியதாவது:
தில்லியில் உள்ள பெரும்பாலான சாக்கடைகள் இயந்திரங்களின் மூலம் சுத்தப்படுத்தப்படுகின்றன. புதை சாக்கடைகளுக்குள் துப்புரவுப் பணியாளர்கள் இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டால், அவர்களுக்கு பாதுகாப்புக் கவசங்களை வழங்குவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. ஆனால், சில ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள் இதைக் கடைப்பிடிப்பதில்லை. 
இந்தச் சம்பவத்தில் உயிரிழந்த தொழிலாளிக்கு தேவையான பாதுகாப்புக் கவசம் வழங்கப்படவில்லை எனத் தெரிய வந்துள்ளது. புதை சாக்கடையில் பாதுகாப்பற்ற முறையில் தொழிலாளர்களை இறங்குமாறு நிர்பந்திக்கும் ஒப்பந்ததாரர்கள், பொறியாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார் அவர்.

ஷீலா தீட்சித்தும் ஆறுதல்
திமர்பூரில் புதை சாக்கடையில் சிக்கிஉயிரிழந்த துப்புரவுப் பணியாளர் கிஷானின் மனைவி, குழந்தைகளை காங்கிரஸ் கட்சியின் தில்லி தலைவர் ஷீலா தீட்சித்தும் புதன்கிழமை மாலையில் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் அவர் கூறுகையில், "புதை சாக்கடையில் சிக்கி துப்புரவுப் பணியாளர் கிஷான் இறந்தது தொடர்பாக அவரது குடும்பத்தைச் சந்தித்து தில்லி முதல்வரோ, தில்லி அரசு உயரதிகாரிகளோ கடந்த இரு நாள்களாக தெரிவிக்காதது வருத்தம் அளிக்கிறது. இதுபோன்ற உயிரிழப்புகளைத் தடுக்கும் வகையில் இச்சம்பவம் குறித்து தில்லி அரசு விசாரணை நடத்த வேண்டும்' என்றார். இச்சந்திப்பின்போது, தில்லி முன்னாள் அமைச்சர் மங்கத் ராம் சிங்கல், கட்சியின் தில்லி தலைமை செய்தித் தொடர்பாளர் ஷர்மிஸ்தா முகர்ஜி, செய்தித் தொடர்பாளர்கள் ரமாகாந்த் கோஸ்வாமி, முன்னாள் எம்எல்ஏ சுரீந்தர் பால் சிங் உள்ளிட்டோர் உடனிருந்தனர். கிஷானின் குடும்பத்தினரை புதன்கிழமை மாலையில் சந்திக்கப் போவதாக ஷீலா தீட்சித் அறிவித்திருந்த நிலையில், அதை அறிந்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் முன்னதாகவே சென்று பிற்பகலில் அவசர, அவசரமாக கிஷானின் குடும்பத்தைச் சந்தித்ததாகப் பேசப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.