இந்திய முப்படை தலைமைத் தளபதியாக தமிழகத்தைச் சேர்ந்த ஜெனரல் என். எஸ். ராஜா சுப்பிரமணி பொறுப்பேற்பு!கடற்படை புதிய தலைமை தளபதியாக அட்மிரல் கிருஷ்ணா சுவாமிநாதன் பொறுப்பேற்புதிருப்பதியில் விசிக தலைவர் திருமாவளவன் சாமி தரிசனம்மனதின் குரல் நிகழ்ச்சி: வெய்யிலில் இருந்து மக்கள் தற்காத்துக் கொள்ள பிரதமர் மோடி அறிவுறுத்தல்!சென்னை: கோயம்பேட்டில் காரை ஏற்றி இளம்பெண் கொலை பெட்ரோல், டீசல் ஏற்றுமதி மீதான கொள்ளை லாபத் தடுப்பு வரியில் தளர்வு: ஜூன் 1 முதல் அமல்தில்லியில் மெட்ரோ நிலையம் அருகே அடுக்குக் கட்டடம் இடிந்து விபத்து: 12 பேர் மீட்புஇரண்டாம் முறையாக பட்டம் வெல்வது யாா்? பெங்களூரு - குஜராத் இன்று மோதல்!
/

ஏடிஎம் இயந்திரத்தில் துளையிட்டு ரூ.8 லட்சம் கொள்ளை

தில்லியில் ஏடிஎம் இயந்திரத்தில் துளையிட்டு ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.

Updated On :23 ஜனவரி 2019, 11:25 pm IST

தில்லியில் ஏடிஎம் இயந்திரத்தில் துளையிட்டு ரூ.8 லட்சத்தை கொள்ளையடித்த சம்பவத்தில் மர்ம நபர்களை போலீஸார் தேடி வருகின்றனர்.
இது தொடர்பாக தில்லி காவல் துறையினர் தெரிவித்தாவது: தெற்கு தில்லியில் உள்ள பிகாஜி காமா பிளேஸ் பகுதியில் உள்ள ஏடிஎம் மையத்திற்கு செவ்வாய்க்கிழமை வாடிக்கையாளர்கள் சிலர் பணம் எடுக்கச் சென்றனர். அப்போது, பணம் வைக்கப்பட்டுள்ள ஏடிஎம் இயந்திரத்தின் கீழ் பகுதியில் துளையிடப்பட்டிருப்பது தெரிய வந்தது. 
இது தொடர்பாக வங்கி ஊழியர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட வங்கியின் அதிகாரிகள் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து, சம்பவ இடத்திற்கு சென்று போலீஸார் விசாரணை நடத்தினர். முதல் கட்ட விசாரணையில் அந்தப் பகுதியில் ஐசிஐசிஐ வங்கியின் ஏடிஎம் இயந்திரத்தில் கொள்ளை சம்பவம் நடந்திருப்பது தெரிய வந்தது. அந்த ஏடிஎம் மையத்தில் முழு நேரப் பணியில் பாதுகாவலர் இல்லை என்பதும் தெரிய வந்தது. ஏடிஎம் மையப் பகுதியில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகள் ஆய்வுக்குள்படுத்தப்பட்டன.
அதில், அதிகாலை 4 மணியளவில் மர்ம நபர்கள் ஏடிஎம் மையத்துக்குள் நுழைந்ததும், அந்த மையத்தில் யாரும் இல்லை என்பதை உறுதிப்படுத்திய பின்னர், கேஸ் கட்டர் இயந்திரத்தின் மூலம் ஏடிஎம் இயந்திரத்தின் கீழ் பகுதியிலிருந்து துளையிட்டு உள்ளே பெட்டியில் இருந்து சுமார் ரூ. 7.80 லட்சத்தை கொள்ளையடித்துச் சென்றதும் தெரிய வந்தது. இச்சம்பவம் தொடர்பாக ஆர்.கே. புரம் காவல் நிலைய போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக சம்பந்தப்பட்ட வங்கி அதிகாரிகளும், பணத்தை கையாளும் நிறுவனமும் விசாரணைக்கு வருமாறு கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.