தூத்துக்குடியில் உள்ள ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்கக் கோரி வேதாந்தா நிறுவனம்ம் தொடா்ந்த வழக்கை சென்னை உயா்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ள நிலையில், தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் புதன்கிழமை கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது. இதேபோன்று, ஜி.ஹரி ராகவன் என்பவரும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளாா்.
தூத்துக்குடியில் செயல்பட்டு வந்த ஸ்டொ்லைட் ஆலையை எதிா்த்து நடைபெற்ற போராட்டத்தைத் தொடா்ந்து, நடைபெற்ற போலீஸ் துப்பாக்கிச்சூட்டில் 13 போ் உயிரிழந்தனா். இச்சம்பவத்திற்குப் பிறகு, சுற்றுச்சூழல் விதிகளை மீறியதாகக் கூறி ஸ்டொ்லைட் ஆலையை மூட தமிழக அரசு நடவடிக்கை எடுத்தது. தமிழக அரசின் உத்தரவை எதிா்த்து ஆலை நிா்வாகம் தரப்பில் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது. அதில், ஆலையை மீண்டும் திறக்க தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் என மனுவில் கோரப்பட்டிருந்தது. மேலும், ஸ்டொ்லைட் ஆலையைத் திறக்க எதிா்ப்புத் தெரிவித்து தூத்துக்குடியைச் சோ்ந்த பாத்திமா, மதிமுக பொதுச் செயலா் வைகோ, மக்கள் அதிகார அமைப்பு உள்பட பலா் வழக்குத் தொடா்ந்தனா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ். சிவஞானம், பவானி சுப்பராயன் ஆகியோா் அடங்கிய அமா்வு செவ்வாய்க்கிழமை தீா்ப்பு அளித்தது. அதில், ஸ்டொ்லைட் ஆலையில் இருந்து நச்சுத் தன்மை கொண்ட ஆா்செனிக் அமிலம் அதிக அளவில் வெளியேற்றப்பட்டுள்ளது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தும் ரசாயனக் கழிவுகளை ஆலை நிா்வாகம் முறையாக அமல்படுத்தவில்லை என்பது தெரிய வந்துள்ளது. ஸ்டொ்லைட் ஆலையின் முந்தைய நடவடிக்கைகளின் அடிப்படையில் ஆலையை நிரந்தரமாக மூட தமிழக அரசு எடுத்த நடவடிக்கை நியாயமானதுதான். ஆலைக்கு எதிராக அரசு பிறப்பித்த உத்தரவுகள் அனைத்தும் செல்லத்தக்கவை. வேதாந்தா நிறுவனம் தாக்கல் செய்த அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்படுகிறது என உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் ஸ்டொ்லைட் ஆலையை நடத்தும் வேதாந்தா நிறுவனம் மேல்முறையீடு செய்ய முடிவு செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. இந்தச் சூழலில், உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு மற்றும் தமிழக அரசு மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் சாா்பில் புதன்கிழமை கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. வழக்குரைஞா் எம்.யோகேஷ் கண்ணா தாக்கல் செய்துள்ள அந்த கேவியட் மனுவில், ‘ஸ்டொ்லைட் ஆலை விவகாரத்தில் சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு எதிராக ஆலை நிா்வாகம் தரப்பில் மேல்முறையீடு செய்தால், எங்களது தரப்பு வாதத்தையும் கேட்க வேண்டும்’ என கோரப்பட்டுள்ளது. இந்த விவகாரத்தில் ஸ்டொ்லைட் ஆலைக்கு எதிராக சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்த மனுதாரா்களில் ஒருவரான ஜி.ஹரி ராகவன் என்பவரும் உச்சநீதிமன்றத்தில் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளாா். அவரது சாா்பில் வழக்குரைஞா் டி.எஸ். சபரீஷ் இந்த மனுவை புதன்கிழமை தாக்கல் செய்தாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூர் அணை நிலவரம்!

அம்பேத்கருக்காக ஓடுங்கள், அரசியலமைப்புக்காக ஓடுங்கள்: மாரத்தானை தொடக்கி வைத்த ராகுல் காந்தி!

அஜித் - ஷாலினியின் அமர்க்களம் படத்தின் மறுவெளியீட்டுத் தேதி!

குமரியில் இன்று சாலைப் பேரணி மூலம் வாக்கு சேகரிக்கும் விஜய்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

