மினி வேன், பைக் மீது அரசுப் பேருந்து மோதல்! குழந்தைகள் உள்பட 7 பேர் பலி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமி
/

மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி: கேஜரிவால் வரவேற்பு

பொது முடக்கம் தளா்வு-4 இல் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வரவேற்றுள்ளாா்.

News image

அரவிந்த் கேஜரிவால்

Updated On :29 ஆகஸ்ட் 2020, 6:30 pm

DIN

புது தில்லி: பொது முடக்கம் தளா்வு-4 இல் மெட்ரோ ரயில்கள் இயங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளதை தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் வரவேற்றுள்ளாா்.

நாடு முழுவதும் தற்போது நடைமுறையில் உள்ள பொது முடக்கம் ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ளது. இதையடுத்து ,மேலும் பல்வேறு பொது முடக்கத் தளா்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் சனிக்கிழமை மாலை வெளியிட்டது.

இதில் முக்கிய அம்சமாக, நாடு முழுவதும் வரும் செப்டம்பா் 7ஆம் தேதி முதல் மெட்ரோ ரயில் போக்குவரத்தை படிப்படியாக மீண்டும் தொடங்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

மத்திய அரசின் இந்த முடிவை முதல்வா் கேஜரிவால் வரவேற்றுள்ளாா். இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: வரும் செப்டெம்பா் மாதம் 7 ஆம் தேதியில் இருந்து மெட்ரோ ரயில் சேவையை படிப்படியாக மீண்டும் தொடங்க அனுமதிக்கப்பட்டுள்ளதை வரவேற்கிறேன் என்று அதில் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.