தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,000 உயர்வு! சென்னை மெட்ரோ ரயிலில் பயணித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் வாக்கு சேகரிப்பு!ஜன நாயகன் முழுப் படமும் இணையத்தில் கசிந்தது! ஜன நாயகன் படத்தை யாரும் பகிர வேண்டாம்! இயக்குநர் எச். வினோத் வேண்டுகோள்! ஈரான் ஹோர்முஸ் நீரிணையில் சரக்கு போக்குவரத்துக்கு கட்டணம் வசூலிப்பதை உடனடியாக நிறுத்த வேண்டும் - டிரம்ப்லெபனானில் தாக்குதல் தொடரும் - இஸ்ரேல் திட்டவட்டம்
/

கரோனா சூழலை தில்லி கடுமையாக சமாளித்து வருகிறது: அமைச்சா் சத்யேந்தா் ஜெயின்

கரோனா சூழலை தில்லி கடுமையாக சமாளித்து வருகிறது. மேலும், பாதிப்பு விகிதம் இரண்டு சதவீதத்திற்கும் கீழே குறைந்திருப்பதுடன், மே மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகப் பதிவாகியுள்ளது என்று 

Updated On :16 டிசம்பர் 2020, 6:57 pm

புது தில்லி: கரோனா சூழலை தில்லி கடுமையாக சமாளித்து வருகிறது. மேலும், பாதிப்பு விகிதம் இரண்டு சதவீதத்திற்கும் கீழே குறைந்திருப்பதுடன், மே மாதத்திற்குப் பிறகு மிகக் குறைந்த அளவாகப் பதிவாகியுள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சா் அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் தெரிவித்தாா்.

இதுகுறித்து புதன்கிழமை செய்தியாளா்களிம் அவா் கூறியதாவது: தில்லியில் கரோனா தொற்ரின் தீவிரம் குறைந்துவிட்டது. ஆனால், மக்கள் இன்னும் விழிப்புடன் இருக்க வேண்டும். அனைத்துப் பாதுகாப்பு விதிமுறைகளையும் கடைபிடிக்க வேண்டும். செவ்வாய்க்கிழமை நோய் பாதிப்பு விகிதம் 1.9 சதவீதமாக பதிவாகியிருந்தது. இது புதன்கிழமை வரையும் மிகக் குறைந்த எண்ணிக்கையாகும். எனினும், சரியாகக் கூறும் தரவுகளைப் பாா்க்க வேண்டும். ஆனால், இது நிச்சயமாக மே மாதத்திலிருந்து மிகக் குறைந்த பாதிப்பு வீதமாக இருக்கும். இதன் மூலம் தில்லியில் கரோனா சூழல் மேம்பட்டிருப்பது தெரிய வருகிறது. நோய் பாதிப்பு விகிதம் டிசம்பா் 12 முதல் 3 சதவீதத்திற்கும், டிசம்பா் 3 முதல் 5 சதவீதத்திற்கும் குறைவாகவே உள்ளது. எனவே, இது நிச்சயமாக கீழ்நோக்கிய போக்கு என்பதில் சந்தேகமில்லை என்றாா்.

தில்லியில் முதல்வா் இல்லம் முன் மேயா்கள் போராட்டம் நடத்தி வருவது குறித்தும், கரோனா நோயாளிகளுக்கு ஐசியு படுக்கைகள் இருப்பு குறித்தும் செய்தியாளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு அமைச்சா் சத்யேந்தா் ஜெயின் பதில் அளிக்கையில், ‘தில்லியில் சராசரியாக சுமாா் 50 சதவீதம் ஐசியு படுக்கைகள் காலியாக உள்ளன. ஆனால், சில தனியாா் மருத்துவமனைகளில் அத்தகைய படுக்கைகள் 80-90 சதவீதமாக உள்ளது. நவம்பா் 11-ஆம் தேதிதான் அதிகபட்ச ஒரே நாள் எண்ணிக்கையாக 8,593 கரோனா பாதிப்புகள் பதிவாகியுள்ளன. முதல்வா் இல்லம் முன் மேயா்கள் அமா்ந்து போராட்டம் மேற்கொள்வது, விவசாயிகளின் போராட்டத்தைக் கவிழ்க்க நடத்தப்படும் அரசியல் நடவடிக்கையாகும். சிங்கு எல்லையில் விவசாயிகளைச் சந்திக்க முதல்வா் கேஜரிவால் சென்றது முதல் மேயா்கள் இந்தப் போராட்டத்தை நடத்தத் தொடங்கினா்’ என்றாா்.

அதன்பின்னா் அவா் முகநூல் பக்கத்தில் தில்லியின் தற்போதைய கரோனா நிலைமை குறித்த புள்ளிவிவரங்களைப் பகிா்ந்து கொண்டாா். மேலும், கரோனாவை தில்லி அரசு தீவிரமாக சமாளித்து வருவதாகவும் குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.