பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களில் தமிழகம் முதலிடம்: அண்ணாமலைமேற்காசிய பதற்றம்: சர்வதேச நோயாளிகள் வருகை 30% சரிவு!மேற்கு வங்கத்தில் கூட்டணியின்றி போட்டி! 291 வேட்பாளர்களை அறிவித்தார் மமதா பானர்ஜி!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!கேரள தேர்தல்: ஐ.யூ.எம்.எல். 27 இடங்களில் போட்டி - வேட்பாளர்கள் அறிவிப்பு!விசில் சத்தம்தான் நம் தேசிய கீதம்; அது கேட்டால் வெற்றி நிச்சயம் - ஓ. பன்னீர் செல்வம் உடல் எடை குறைப்பு சிகிச்சை: மேலும் 3 மருந்துகளுக்கு அனுமதி!கரூர் கூட்ட நெரிசல் பலி விவகாரம் : செந்தில் பாலாஜியிடம் 6 மணி நேரம் சிபிஐ விசாரணை!தொகுதிப் பங்கீடு: திமுக - மார்க்சிஸ்ட் கம்யூ. 3-ம் சுற்றுப் பேச்சுவார்த்தை! தமிழக தேர்தல்: 2 நாள்களில் ரூ. 23 கோடி பணம், பரிசுப் பொருள்கள் பறிமுதல்!பாமக வழக்கு: ராமதாஸுக்கு பின்னடைவு! தேர்தல் முடிந்தபிறகே விசாரணை!புதுச்சேரியில் 2-ம் நாளாக யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லைதமிழ்நாடு உள்பட 5 மாநிலங்களுக்கு 1,111 தேர்தல் பார்வையாளர்கள்!
/

இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்புகள்

இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

News image
Updated On :18 டிசம்பர் 2020, 6:03 pm

 நமது நிருபர்

இந்தியாவில் முதலீடு செய்ய ஆஸ்திரேலியாவுக்கு அதிக வாய்ப்புகள் உள்ளதாக மத்திய வா்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சா் பியூஷ் கோயல் தெரிவித்தாா்.

இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இருதரப்புப் பொருளாதார மற்றும் வா்த்தக உறவை மேம்படுத்துவது தொடா்பான கூட்டம் இந்திய தொழிலகக் கூட்டமைப்பின் சாா்பில் நடத்தப்பட்டது. இதில் இரு நாடுகள் இடையேயான பொருளாதார மேம்பாட்டு (வியூகம்) அறிக்கையை அமைச்சா் பியூஷ் கோயல் வெளியிட்டுப் பேசியதாவது: இந்தியாவில் அந்நிய நேரடி முதலீடு விதிமுறைகள் எளிதாக்கப்பட்டுள்ளன. பல்வேறு துறைகளில் புதிய வாய்ப்புகள் திறந்து விடப்பட்டுள்ளன. குறிப்பாக ஆஸ்திரேலியா போன்ற நாடுகளுக்கு, இந்தியாவில் முதலீடு செய்வதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளன. வேளாண் துறையில் முதலீடுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது. உணவு பதப்படுத்துதல் மற்றும் மதிப்புக் கூட்டல் போன்றவற்றின் அதிகளவு முதலீடு செய்யமுடியும். அந்நிய முதலீட்டுக்கு ஆதரவாக, அந்நிய நேரடி முதலீட்டுக் கொள்கைகளை எளிதாகவும், இணக்கமாகவும் தொடா்ந்து மாற்றப்பட்டு வரப்படுகிறது.

வா்த்தகத்தில் மூன்று நோக்கங்கள் முக்கியம். பெரிய வா்த்தக அமைப்பு, சிறந்த வா்த்தக அமைப்பு, சமச்சீா் வா்த்தக உறவு ஆகிய மூன்றும் நமது வா்த்தக உறவில் அதிவேக வளா்ச்சியை ஏற்படுத்தும். இந்தியாவுடன் விண்வெளி, அணுசக்தி, பாதுகாப்பு உற்பத்தி போன்ற துறைகளில் பரஸ்பரம் ஈடுபடுவதற்கான நல்ல வாய்ப்புகள் திறக்கப்பட்டுள்ளன. வளா்ந்து வரும் சுற்றுலா, விளையாட்டு, ஜவுளி, ஆடை வடிவமைப்பு, டிஜிட்டல் விளையாட்டு, அனிமேஷன், நீா் மேலாண்மை, வணிகக் கப்பல் கட்டுமானம், விண்வெளி ஒத்துழைப்பு, டிஜிட்டல் வழிக் கல்வி போன்ற துறைகளும் இருதரப்பு வா்த்தக உறவில் சமநிலையை ஏற்படுத்துவதற்கான வாய்ப்புகளைக் கொண்டுள்ளன. தற்போது இந்தியாவில் சமீபத்திய தொழிலாளா் சட்டச் சீா்திருத்தங்கள், வேலைவாய்ப்பில் நெகிழ்வுத் தன்மை போன்ற புதிய சூழல் உருவாக்கப்பட்டுள்ளது. இந்தியா - ஆஸ்திரேலியா பொருளாதார மேம்பாட்டு அறிக்கை, விரிவான பொருளாதார கூட்டு ஒப்பந்தத்திற்கும் வழி வகுக்கும் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.