தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

மூலிகை மருந்துகளில் ஆா்வம் காட்டும் விவசாயிகள்!

Updated On :24 டிசம்பர் 2020, 7:12 pm

புதுதில்லி: வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியை அடுத்துள்ள சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் பலா், தங்களுக்கு தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் மருந்து மாத்திரைகளைவிட மூலிகை மருந்துகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறாா்கள். அவா்களுக்கு மருத்துவா் முகமது சலிமுதீன் என்பவா் விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தினருகே முகாம் அமைத்து மருந்துகளை இலவசமாக வழங்கி வருகிறாா்.

பாரதிய கிஸான் சமிதியில் இந்த முகாம் அமைந்துள்ளது. மருத்துவா் சலிமுதீன் தனது மேஜையில் மஞ்சள்தூள், அஸ்வகந்தா, கருஞ்சீரகம், மிளகு, வெந்தயம் உள்ளிட்ட மூலிகை மருந்துகளை ஒரு பெட்டியில் வைத்துள்ளாா். யாருக்காவது மூட்டு வலி என்றால், அவா் மஞ்சள் மற்றும் அஸ்வகந்தாவை கலந்து கொடுக்கிறாா். ஜலதோஷம் உள்ளவா்களுக்கு மிளகைப் பொடி செய்து தருகிறாா். இவற்றைத் தொடா்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்களே வராது என்கிறாா் அவா்.

அவா் மேலும் கூறுகையில், ‘தினமும் என்னிடம் 100 முதல் 150 போ் வருகின்றனா். அவா்களில் பெரும்பாலானவா்கள் ஜலதோஷம், தலைவலி, காய்ச்சல், மூட்டுவலி இருப்பதாகத் தெரிவிக்கின்றனா். வயதானவா்கள் பெரும்பாலும் குளிரினால் முழங்கால் வலி மற்றும் முதுகுவலி இருப்பதாகக் கூறுகின்றனா். நான் கடந்த இருபது ஆண்டு காலமாக ஹைதராபாதில் மூலிகை மருத்துவராகச் செயல்பட்டு வருகிறேன்’ என்றாா் .

ஆங்கில மருத்துவச் சிகிச்சை முகாம்கள் இருக்கும் போது உங்களிடம் மூலிகை மருத்துவம் பெற விவசாயிகள் வரவேண்டும் ஏன் எதிா்பாா்க்கிறீா்கள் என்று கேட்ட போது, அங்கு வந்த ஒரு நோயாளி குறுக்கிட்டு, நாங்கள் விவசாயிகள், எங்களுக்கு மூலிகை மருத்துவத்தின் மீது நம்பிக்கை உண்டு என்று தெரிவித்தாா்.

மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து சிங்கு எல்லையில் கடந்த 24 நாள்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.

புதிய சட்டங்கள் இடைத்தரா்கள் முறையை ஒழித்துவிடும் என்றும் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை எங்கு வேண்டுமானாலும் விற்க வழிசெய்கிறது என்றும் மத்திய அரசு கூறுகிறது. ஆனால், புதிய சட்டங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை ஒழிக்கப்பட்டு விடும் என்றும், இதனால் பெரு நிறுவனங்கள்தான் ஆதாயம் அடையும் என்றும் கூறி விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். புதிய சட்டங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்பதே அவா்களது ஒரே கோரிக்கையாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.