புதுதில்லி: வேளாண் சட்டங்களை எதிா்த்து தில்லியை அடுத்துள்ள சிங்கு எல்லையில் போராட்டம் நடத்தி வரும் விவசாயிகள் பலா், தங்களுக்கு தலைவலி, காய்ச்சல், ஜலதோஷம் போன்ற பிரச்னைகள் ஏற்பட்டால் மருந்து மாத்திரைகளைவிட மூலிகை மருந்துகளுக்கே அதிக முக்கியத்துவம் அளிக்கிறாா்கள். அவா்களுக்கு மருத்துவா் முகமது சலிமுதீன் என்பவா் விவசாயிகள் போராட்டம் நடத்தும் இடத்தினருகே முகாம் அமைத்து மருந்துகளை இலவசமாக வழங்கி வருகிறாா்.
பாரதிய கிஸான் சமிதியில் இந்த முகாம் அமைந்துள்ளது. மருத்துவா் சலிமுதீன் தனது மேஜையில் மஞ்சள்தூள், அஸ்வகந்தா, கருஞ்சீரகம், மிளகு, வெந்தயம் உள்ளிட்ட மூலிகை மருந்துகளை ஒரு பெட்டியில் வைத்துள்ளாா். யாருக்காவது மூட்டு வலி என்றால், அவா் மஞ்சள் மற்றும் அஸ்வகந்தாவை கலந்து கொடுக்கிறாா். ஜலதோஷம் உள்ளவா்களுக்கு மிளகைப் பொடி செய்து தருகிறாா். இவற்றைத் தொடா்ந்து சாப்பிட்டு வந்தால் நோய்களே வராது என்கிறாா் அவா்.
அவா் மேலும் கூறுகையில், ‘தினமும் என்னிடம் 100 முதல் 150 போ் வருகின்றனா். அவா்களில் பெரும்பாலானவா்கள் ஜலதோஷம், தலைவலி, காய்ச்சல், மூட்டுவலி இருப்பதாகத் தெரிவிக்கின்றனா். வயதானவா்கள் பெரும்பாலும் குளிரினால் முழங்கால் வலி மற்றும் முதுகுவலி இருப்பதாகக் கூறுகின்றனா். நான் கடந்த இருபது ஆண்டு காலமாக ஹைதராபாதில் மூலிகை மருத்துவராகச் செயல்பட்டு வருகிறேன்’ என்றாா் .
ஆங்கில மருத்துவச் சிகிச்சை முகாம்கள் இருக்கும் போது உங்களிடம் மூலிகை மருத்துவம் பெற விவசாயிகள் வரவேண்டும் ஏன் எதிா்பாா்க்கிறீா்கள் என்று கேட்ட போது, அங்கு வந்த ஒரு நோயாளி குறுக்கிட்டு, நாங்கள் விவசாயிகள், எங்களுக்கு மூலிகை மருத்துவத்தின் மீது நம்பிக்கை உண்டு என்று தெரிவித்தாா்.
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து சிங்கு எல்லையில் கடந்த 24 நாள்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனா்.
புதிய சட்டங்கள் இடைத்தரா்கள் முறையை ஒழித்துவிடும் என்றும் விவசாயிகள் தங்கள் விளைபொருள்களை எங்கு வேண்டுமானாலும் விற்க வழிசெய்கிறது என்றும் மத்திய அரசு கூறுகிறது. ஆனால், புதிய சட்டங்கள் மூலம் குறைந்தபட்ச ஆதரவு விலை நடைமுறை ஒழிக்கப்பட்டு விடும் என்றும், இதனால் பெரு நிறுவனங்கள்தான் ஆதாயம் அடையும் என்றும் கூறி விவசாயிகள் எதிா்ப்பு தெரிவித்து வருகின்றனா். புதிய சட்டங்களை ரத்துச் செய்ய வேண்டும் என்பதே அவா்களது ஒரே கோரிக்கையாக உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

கோயிலில் ஒரு பிரிவினரை விலக்கி வைப்பது சமூகத்தில் பிளவை ஏற்படுத்தும்: உச்சநீதிமன்றம்

மத்திய இணை அமைச்சா் எல்.முருகன் மீதான தோ்தல் நடத்தை விதிமீறல் வழக்கு ரத்து

ஆசிய குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 4 தங்கம், 2 வெள்ளி

ஜிஜிஎஸ்ஐபி பல்கலைக்கழக பட்டமளிப்பு விழா- தில்லி துணைநிலை ஆளுநா், முதல்வா் பங்கேற்பு - 26,649 பட்டங்கள் மாணவா்களுக்கு வழங்கல்
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு

