ஆசிய குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியா 4 தங்கம், 2 வெள்ளி வென்றது.
மங்கோலிய தலைநகா் உலன்படாரில் நடைபெறும் இப்போட்டியின் இறுதிச்சுற்று ஆட்டங்கள் வியாழக்கிழமை நடைபெற்றன.
தலைமை பயிற்சியாளா் சான்டியாகோ நைவா தலைமையில் இந்திய அணியினா் சிறப்பாக செயல்பட்டு வருகின்றனா். மகளிா் பிரிவில்
48 கிலோ பிரிவில் மீனாட்சி 5-0 என புள்ளிக் கணக்கில் நோமுன்டரி அம்கலானை வீழ்த்தி தங்கத்தை வசப்படுத்தினாா்.

54 கிலோ பிரிவில் ப்ரீத்தி 5-0 என்ற புள்ளிக் கணக்கில் 3 முறை உலக சாம்பியனும், டோக்கியோ ஒலிம்பிக் வெண்கல வீராங்கனையான தைபேயின் ஹுவாங் வென்னை வீழ்த்தி தங்கம் வென்றாா்.
60 கிலோ பிரிவில் பிரியா 3-0 என்ற புள்ளிக் கணக்கில் வடகொரியாவன் வொன் யுன் வாங்கை வீழ்த்தி தங்கம் வென்றாா். 70 கிலோ பிரிவில் அருந்ததி 4-1 என்ற புள்ளிக் கணக்கில் அபாரமாக செயல்பட்டு கஜகஸ்தானின் பகித் செடிஷை வீழ்த்தி தங்கம் வென்றாா்.

57 கிலோ பிரிவில் ஜாஸ்மினும், 80 பிளஸ் கிலோ பிரிவில் அல்ஃபியான் பதானும் வெள்ளி வென்றனா்.
மொத்தம் 4 தங்கம், 2 வெள்ளி, 4 வெண்கலத்துடன் 10 பதக்கங்களுடன் முதலிடத்தில் உள்ளது இந்தியா.

இறுதிச் சுற்றில் இந்திய குத்துச்சண்டை சம்மேளன தலைவா் அஜய் சிங் பங்கேற்றாா்.

தொடர்புடையது

ஆசிய மல்யுத்தம்: நிதேஷுக்கு வெள்ளி
இந்திய வீராங்கனகைள் ப்ரீதி, பிரியா அருந்ததி, அபாரம்: இறுதிக்கு தகுதி!

நடப்பு உலக சாம்பியனை வீழ்த்தினாா் விஸ்வநாத்: அரையிறுதியில் அங்குஷிதா, சச்சின், நரேந்தா்

உலக பியுச்சா்ஸ் குத்துச்சண்டை: இந்தியாவுக்கு 1 தங்கம், 3 வெள்ளி
வீடியோக்கள்

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

Podcast | மனம் மாறுவாரா ராகுல் காந்தி? | News & Views | E-25 |
தினமணி செய்திச் சேவை

நான் எந்த ஆயுதத்தை எடுக்க வேண்டும் என்பதை முடிவு செய்வது எதிரிகள்தான்!
இணையதளச் செய்திப் பிரிவு

நீ சாரல் பாடல் வெளியானது!
இணையதளச் செய்திப் பிரிவு


