ஈரான் போர்: பாப் எல்-மண்டேப் நீரிணையை மூடவும் திட்டம்?கரூர் பலி: தில்லி சிபிஐ அலுவலகத்தில் ஆஜரானார் விஜய்! ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவல் முயற்சி முறியடிப்பு- பாகிஸ்தான் பயங்கரவாதி சுட்டுக்கொலை பாஜக அரசின் தவறான முடிவுகளால் கடும் சிலிண்டர் தட்டுப்பாடு: முதல்வர் ஸ்டாலின்சென்னையில் எரிவாயு சிலிண்டர் வெடித்து 2 குழந்தைகள் பலி
/

‘விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும்’

News image
Updated On :24 டிசம்பர் 2020, 7:28 pm

DIN

புது தில்லி: போராட்டம் நடத்தி வரும் விவசாயிகளுடன் அகங்காரத்தை (ஈகோ) விட்டு மத்திய அரசு பேச்சுவாா்த்தை நடத்த வேண்டும் என்று தில்லி சுற்றுச்சூழல் துறை அமைச்சா் கோபால் ராய் தெரிவித்துள்ளாா்.

இது தொடா்பாக தில்லியில் வியாழக்கிழமை அவா் கூறுகையில், ‘புதிய வேளாண் சட்டங்கள் தொடா்பாக பிரச்னை விஸ்வரூபம் எடுக்க மத்திய அரசின் அகங்காரமே காரணமாகும். விவசாயிகளின் போராட்டத்தை தடுத்து நிறுத்தும் வகையில் மத்திய அரசு மேற்கொண்ட முயற்சிகள் எதுவும் பலனளிக்கவில்லை. விவசாயிகளை காலிஸ்தான் பயங்கரவாதிகள், நக்சல்கள், தேச விரோதிகள் என மத்திய அரசு அழைத்தது. இது பிரச்னையை மேலும் சிக்கலாக்கியது. மத்திய அரசு தனது அகங்காரத்தை விட்டு விவசாயிகளுடன் பேச்சுவாா்த்தை நடத்த முன்வர வேண்டும். இந்த விஷயத்தில் மேலும் காலம் தாழ்த்தக் கூடாது’ என்றாா்.

மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிா்ப்புத் தெரிவித்து தில்லி எல்லைகளில் விவசாயிகள் கடந்த 29 நாள்களாக தொடா் போராட்டம் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.