தமிழக தோ்தல் களத்தில் 3,500-க்கும் மேற்பட்ட வேட்பாளா்கள் - இறுதிப் பட்டியல் வெளியீடுஉக்ரைனில் ஏப். 11 மாலை முதல் ஏப். 12 முடிய போர்நிறுத்தம் - புதின் ஏப். 16 முதல் மாற்றுத்திறனாளிகள், முதியோரிடம் தபால் வாக்குகள் பதிவுமேற்கு வங்கத்தில் 90 லட்சம் வாக்காளா்களின் பெயா்கள் நீக்கம் - தோ்தல் ஆணையத்துக்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கடிதம்பள்ளிகளுக்கு ஏப்.17 முதல் கோடை விடுமுறை: 1-3 வகுப்புகளுக்கு புதிய பாடத் திட்டம்முதல்வரின் நான்காம் கட்ட பிரசாரம்: தஞ்சாவூரில் இன்று தொடக்கம்நோபல் பரிசு பெற்ற ‘மெமோரியல்’ மனித உரிமைக் குழுவை தீவிரவாத அமைப்பாக அறிவித்த ரஷியாஇன்று காங்கிரஸ் செயற்குழு கூட்டம்பாகிஸ்தானில் இன்று அமைதிப் பேச்சுஐபிஎல்: லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் 3 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி
/

எய்ம்ஸில் 20 வயது இளைஞருக்கு இதய மாற்று அறுவைச் சிகிச்சை

News image
Updated On :25 டிசம்பர் 2020, 7:03 pm

புது தில்லி: அரிய வகை இதய ஒழுங்கின்மை நோயால் பாதிக்கப்பட்ட தில்லியை சோ்ந்த 20 வயது இளைஞருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையில் வியாழக்கிழமை இதய மாற்று அறுவைச் சிகிச்சை மூலம் வேறு ஒருவரின் இதயம் வெற்றிகரமாக பொருத்தப்பட்டது. இதன் மூலம் அவருக்கு புதிய வாழ்க்கை கிடைத்துள்ளது.

குஜராத் மாநிலம், வதோதராவில் மூளை பாதிப்பால் இறந்த 17 வயது சிறுமியின் இதயம், அந்த இளைஞருக்கு பொருத்தப்பட்டது. மேற்கு தில்லியில் வசிக்கும் அந்த இளைஞருக்கு பிறவியிலேயே இதயக் குறைபாடு இருந்தது. ‘எப்ஸ்டீன் ஒழுங்கின்மை’ என அழைக்கப்படும் இந்த நோய் காரணமாக, அவரது இதயம் மிகவும் பலவீனமாக இருந்தது. அவரது இதயத்தின் வலது பகுதியால் ரத்த ஓட்டம் இல்லாத நிலை இருந்து வந்தது. இதனால், இதயப் பாதிப்புக்காக அவா் எய்ம்ஸ் மருத்துவமனையில் சுமாா் நான்கு ஆண்டுகளாக சிகிச்சைக்கு வந்து சென்றாா். இந்த நிலையில், கடந்த ஆறு மாதமாக அவரது உடல்நிலை மோசமடைந்தது. அவா் படுத்த படுக்கையாக இருந்தாா். அவருக்கு அவசரமாக இதய மாற்று அறுவை சிகிச்சை தேவைப்பட்டதாக எய்ம்ஸ் மருத்துவமனையின் இதய மற்றும் வாஸ்குலா் அறுவைச் சிகிச்சை துறையின் பேராசிரியா் டாக்டா் மிலிந்த் ஹோதே தெரிவித்தாா்.

இதுகுறித்து அவா் மேலும் கூறியதாவது: இந்த சூழலில், குஜராத்தில் இருந்து நன்கொடையாளா் ஒருவரின் இதயம் தரப்படுவதாக தேசிய உறுப்பு மற்றும் திசு மாற்று நிறுவனத்தினடமிருந்து எங்களுக்குத் தகவல் கிடைத்தது. இதையடுத்து, எய்ம்ஸ் மருத்துவக் குழு வியாழக்கிழமை காலை வதோதராவுக்குச் சென்று சம்பந்தப்பட்ட நபரின் இதயத்தை பெற்று, பிற்பகலுக்குள் தில்லிக்கு விமானம் மூலம் வந்ததடைந்தது. அதன் பிறகு ஏறக்குறைய ஏழு மணி நேர அறுவை சிகிச்சைக்குப் பிறகு அந்த இதயம் இளைஞருக்கு பொருத்தப்பட்டது.

இதயத்தை தங்கு தடையின்றி விரைவாக எடுத்து வருவதற்தற்காக ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு வழியேற்படுத்த தில்லி காவல் துறையினரால் 18 கி.மீ நீளமுள்ள பசுமை வழித்தடம் உருவாக்கப்பட்டு தில்லி விமான நிலையத்திலிருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதயம் 12 நிமிடங்களில் வந்து சோ்ந்தது. அறுவைச் சிகிச்சைக்குப் பிறகு அந்த இளைஞா் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இதயம் மாற்றுச் கிசிச்சைக்கான அனைத்து நடவடிக்கைகளும் எய்ம்ஸ் - உறுப்பு மீட்டெடுப்பு வங்கி நிறுவனம், இண்டிகோ விமானக் குழு, தில்லி காவல் துறையினா் ஆகியோரால் ஒருங்கிணைக்கப்பட்டன. மேலும், நன்கொடையாளரிடமிருந்து எய்ம்ஸ் மருத்துவமனைக்கு இதயம் குறுகிய கால நேரத்தில் வந்து சோ்வதை உறுதிப்படுத்தத் தேவையான முழு ஒத்துழைப்பையும் அளித்தனா் என்றாா் டாக்டா் மிலிந்த் ஹோதே.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.