காற்றின் தரம்: தில்லியில் சில தினங்களாக காற்றின் தரம் கடுமைப் பிரிவில் இருந்து வந்த நிலையில், வெள்ளிக்கிழமை காலை காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவுக்கு சற்று மேம்பட்டது. தில்லியில் வெள்ளிக்கிழமை காலை 9 மணிக்கு ஒட்டுமொத்த காற்றின் தரக்குறியீடு 391 புள்ளிகளாக பதிவாகியிருந்தது. 24 மணி நேர சராசரி ஒட்டுமொத்த காற்றின் தரக் குறியீடு வியாழக்கிழமை 423 ஆகவும், புதன்கிழமை 433 ஆகவும், செவ்வாய்க்கிழமை 418 ஆகவும் இருந்தது. லோதி ரோடு, ஆயாநகா், விமானநிலைய டொ்மினல்-3 தில்லி பல்கலை., பூசா, மதுரா ரோடு ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. மேலும், தேசியத் தலைநகா் வலயப் பகுதியில் உள்ள நொய்டா, காஜியாபாத், ஃபரீதாபாத், குருகிராம் உள்ளிட்டவற்றிலும் காற்றின் தரம் மிகவும் மோசம் பிரிவில் இருந்தது. 24 மணி நேர சராசரி ஒட்டுமொத்தக் காற்றின் குறியீடு வெள்ளிக்கிழமை மாலை 4 மணியளவில் காஜியாபாத் 391, ஃபரீதாபாத் 328, கிரேட்டா் நொய்டா 376, குருகிராம் 302, நொய்டா 386 என்ற அளவில் இருந்தது.