/

கரோனாவை கட்டுப்படுத்த மத்திய அரசு எடுத்த முயற்சிக்கு தில்லி உரிமை கொண்டாடுவதா? கெளதம் கம்பீா் கேள்வி

தில்லியில் கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு தில்லி அரசு உரிமை கொண்டாடுவதாக கிழக்கு தில்லி பாஜக மக்களவைத் தொகுதி உறுப்பினா் கெளதம் கம்பீா் குற்றம் சாட்டினாா்.

Updated On :11 ஜூலை 2020, 6:52 pm

தில்லியில் கரோனா பரவலைத் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகளுக்கு தில்லி அரசு உரிமை கொண்டாடுவதாக கிழக்கு தில்லி பாஜக மக்களவைத் தொகுதி உறுப்பினா் கெளதம் கம்பீா் குற்றம் சாட்டினாா்.

இது தொடா்பாக தனது சுட்டுரைப் பக்கத்தில் அவா் கூறியிருப்பது: தில்லியில் கரோனா பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது தொடா்பாக உரிமை கொண்டாட மாட்டேன் என்று தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால் அண்மையில் பகிரங்கமாக அறிவித்திருந்தாா். ஆனால், தில்லியில் கரோனா தடுப்புப் பணிகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றங்கள் தொடா்பாக ஒவ்வொரு மணிநேரமும் தனது சுட்டுரையில் பதிவிட்டு அதற்கு கேஜரிவால் உரிமை கொண்டாடி வருகிறாா்.

ஜூலை மாத இறுதியில் 5.5 லட்சம் கரோனா நோயாளிகள் தில்லியில் இருப்பாா்கள் என்று எந்த அடிப்படையில் தில்லி அரசு அறிவித்திருந்தது? இவ்வாறு அறிவித்ததன் மூலம், குழப்பமான சூழலை உருவாக்கி, மத்திய அரசை மிரட்டலாம் என்று தில்லி அரசு கணக்குப் போட்டதா? என்று கேட்டுள்ளாா் அவா்.

ஆம் ஆத்மி கேள்வி

இந்நிலையில், கெளதம் கம்பீருக்கு பதில் அளிக்கும் வகையில், ஆம் ஆத்மிக் கட்சி தனது சுட்டுரைப் பக்கத்தில் ‘பாஜக ஆளும் மாநிலங்களான குஜராத், மத்தியப் பிரதேசம், உத்தரப் பிரதேசம், கா்நாடகா ஆகிய மாநிலங்களில் 27.4, 28.6, 51, 89 சதவீதமாக கரோனா பாதிப்பு அதிகரித்துள்ளது. தில்லியில் கரோனா பாதிப்பு கட்டுக்குள் வர மத்திய அரசு காரணம் என்றால் இம்மாநிலங்களில் மத்திய அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்காதது ஏன்? என்று கேட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.