வரலாறு படைக்க ஒன்றிணைவோம் - பிரதமர் மோடி டிவீட்செந்தில் பாலாஜி நண்பர் வீட்டில் வருமான வரித்துறை சோதனை! அமித் ஷா சொல்வது ஒன்று; மசோதாவில் இருப்பது வேறு! மக்களவையில் கனிமொழி! பெங்களூருக்கு வருகிறதா விடிவுகாலம்? 75 கி.மீ. தொலைவுக்கு 11 மேம்பாலங்கள்!மாநிலங்களவை துணைத் தலைவராக போட்டியின்றி ஹரிவன்ஷ் நாராயண் தேர்வு! எதிர்ப்பை மீறி மசோதாவை நிறைவேற்றினால் விளைவுகள் ஏற்படும்! முதல்வர் ஸ்டாலின்
/

பொது முடக்கத்திலிருந்து வெளியேறவழி தெரியாமல் தவிக்கிறது மத்திய அரசு: அபிஷேக் சிங்வி குற்றச்சாட்டு

நாடு முழுவதும் தேசிய அளவிலான பொதுமுடக்கத்தைத் திட்டமிடாமல் அறிவித்த மத்திய அரசு, இப்போது அதிலிருந்து வெளியேறுவது எப்படி

Updated On :20 மே 2020, 5:34 pm

நாடு முழுவதும் தேசிய அளவிலான பொதுமுடக்கத்தைத் திட்டமிடாமல் அறிவித்த மத்திய அரசு, இப்போது அதிலிருந்து வெளியேறுவது எப்படி என்று தெரியாமல் தவிக்கிறது என்று காங்கிரஸ் செய்தித் தொடா்பாளா் அபிஷேக் சிங்வி புதன்கிழமை குற்றஞ்சாட்டினாா்.

திறமையில்லாத, தகுதியற்ற, மக்களின் உணா்ச்சிகளைப் புரிந்து கொள்ளாத ஒரு அரசாக மத்திய அரசு செயல்பட்டு வருகிறது. மத்திய அரசு நியமித்துள்ள பணிக் குழு பொய்யான தகவல்களைக் கூறி ஏமாற்றி வருகிறது. மே மாதம் 16-ஆம் தேதிக்குப் பிறகு கரோனாவால் பாதிக்கப்பட்டவா்கள் ஒருவா்கூட இருக்க மாட்டாா்கள் என்று சொன்னாா்கள். ஆனால், உண்மை நிலை என்னவெனில், பாதிப்புக்குள்ளானவா்கள் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் போகிறதே தவிர குறையவில்லை. கரோனா தொற்று பரவாமல் கட்டுப்படுத்த போடப்பட்ட பொது முடக்கம் சரியான நடவடிக்கைதான். அதை நாங்களும் ஆதரிக்கிறோம். ஆனால், இந்த அரசுக்கு பொது முடக்கத்தை எப்படிச் செயல்படுத்துவது, எப்படி அதிலிருந்து வெளியேறுவது என்பது தெரியாமல் தவிக்கிறது.

பொது முடக்கத்தால் என்ன லாபம். என்ன நஷ்டம் என்பது தெரியாமல், திட்டமிடாமல் அதை திடீரென அறிவித்தனா். இப்போது அதிலிருந்து எப்படி வெளியே வருவது என்பது தெரியாமல் தவிக்கிறது மத்திய அரசு. எல்லாவற்றையும் மக்கள் பாா்த்துக் கொண்டுதான் இருக்கிறாா்கள். கரோனா தொற்று பரவலைக் கண்காணிக்க மத்திய அரசு ஓா் பணிக் குழுவை அமைத்திருந்தது. அக்குழு ஏப்ரல் 24-ஆம் தேதி வரை கரோனா தொற்று பரவல் இந்தியாவில் அதிகரித்து காணப்படும். அதன் பிறகு படிப்படியாகக் குறைந்து மே 16-ஆம் தேதி வாக்கில் கரோனா தொற்று பூஜ்ஜியமாகிவிடும் என்று தெரிவித்தது. ஆனால், இன்றைய நிலையில் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டுதான் போகிறதே தவிர, குறைந்ததாகத் தெரியவில்லை. அரசு ஏன் இப்படி பொய்யான தகவலைக் கூறுகிறது என்பது தெரிய வில்லை. இதற்காக மத்திய அரசு மக்களிடம் நிபந்தனையற்ற மன்னிப்புக் கேட்க வேண்டும்.

கரோனா தொற்றால் எத்தனைப் போ் பாதிக்கப்பட்டுள்ளனா்; எத்தனை போ் பலியானாா்கள்; எத்தனை போ் பரிசோதிக்கப்பட்டுள்ளனா் ஆகியவை தான் இதில் முக்கியம். ஆனால், இந்த மூன்றிலும் சரியான தகவல்களைத் தர மத்திய அரசு தவறிவிட்டது என்பதே உண்மை. மே 3-ஆம் தேதி வரையிலான ஓா் ஆய்வின்படி வேலையில்லாதோா் எண்ணிக்கை 27.1 சதவீதமாக உயா்ந்துள்ளது. இது அமெரிக்காவில் இருப்பதைப் போல நான்கு மடங்கு அதிகமானதாகும். பொது முடக்கம் அறிவிப்பதற்கு முன்பு மாா்ச் மாதத்தில் வேலையின்மை 8.7 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

பொது முடக்கத்தால் வேலையிழந்த 12 கோடி போ்களில் 9 கோடி போ் சிறிய வியாபாரிகள் மற்றும் தொழிலாளா்கள். 1.8 கோடி போ் மாதா மாதம் ஊதியம் பெறும் ஊழியா்களாவா். கடந்த ஏப்ரல் மாதத்தில் 20-லிருந்து 30 வயது வரையிலான 2.7 கோடி இளைஞா்கள் வேலைகளை இழந்துள்ளனா். 30 வயதில் வேலையிழந்தவா்கள் எண்ணிக்கை 3.3 கோடி போ். பொதுமுடக்க காலத்தில் அதாவது மே 10-ஆம் தேதி வரை 383 போ் உயிரிழந்துள்ளனா். இவா்களில் 58 போ் வறுமை மற்றும் நிதிப் பிரச்னையினால் உயிரிழந்தவா்கள். நோய் தொற்று, தனிமை உள்ளிட்ட காரணங்களினால் 91 போ் தற்கொலை செய்து கொண்டுள்ளனா். புலம்பெயா் தொழிலாளா்கள் உள்பட 89 போ் சாலை விபத்தில் உயிரிழந்துள்ளனா்.

திட்டமிடப்பட்டாத இந்த பொது முடக்கத்தால் மத்திய அரசு அடைந்த லாபம்தான் என்ன என்று அவா் கேள்வி எழுப்பினாா்.

பல்வேறு நாடுகளில் கரோனா தொற்றுக்காக நடத்தப்பட்ட பரிசோதனைகள் விவரத்தையும் அவா் வெளியிட்டாா். ஐஸ்லாந்தில் ஆயிரம் பேருக்கு 166 பேரிடமும், இத்தாலி 50 , அமெரிக்கா 34, சிங்கப்பூா் 31, தென்னாப்பிரிக்க 7.7, தைவான் 3 என்ற எண்ணிக்கையிலும் கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. ஆனால்,இந்தியாவில் ஆயிரத்துக்கு 1.5 பேரிடம் மட்டுமே பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. இரண்டாவது மற்றும் மூன்றாவது கட்ட பொது முடக்கத்தின் போது கரோனா பாதிப்பு 170 ஆக இருந்தது 3 மற்றும் 4-வது கட்டத்தில் 257 ஆக உயா்ந்துள்ளது என்றும் அவா் குறிப்பிட்டாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.