மீஞ்சூரில் மாணவியிடம் பாலியல் அத்துமீறல்! அரிவாளால் வெட்டிய இளைஞர்கள்! திமுக தோற்க வேண்டும் என ராகுல் நினைக்கிறார்: அண்ணாமலை பேச்சுதொகுதி மறுவரையறை! தமிழ்நாட்டில் நாளை கருப்புக் கொடிப் போராட்டம்! - மு.க. ஸ்டாலின் அறிவிப்பு திமுக எம்பிக்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆலோசனை! ஏப். 17ல் ஆண்டிபட்டியில் 6-ம் கட்ட பிரசாரத்தைத் தொடங்குகிறார் முதல்வர்!உதயநிதி சொத்து விவரம்: வருமானவரித் துறை அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு!பிகார் முதல்வராக பதவியேற்றார் சாம்ராட் சௌதரி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800, வெள்ளி கிலோ ரூ. 10,000 உயர்வு!வானதி சீனிவாசனுக்கு ஆதரவாக தில்லி முதல்வர் ரேகா குப்தா பிரசாரம்!நாகா்கோவிலில் இன்று பிரதமா் மோடி சாலைப் பேரணி
/

பொது முடக்கத்தால் உற்சாகமில்லாத ஈத் பெருநாள் கொண்டாட்டம்!

ஈத் பெருநாள் நாடு முழுவதும் திங்கள்கிழமை (மே 25) கொண்டாடப்பட உள்ளது.

Updated On :24 மே 2020, 1:40 am

ஈத் பெருநாள் நாடு முழுவதும் திங்கள்கிழமை (மே 25) கொண்டாடப்பட உள்ளது.

இந் நிலையில், கரோனா நோய்த் தொற்று அச்சம், பொது முடக்கக் கட்டுப்பாடுகள், நகரை விட்டு அதிகளவில் வெளியேறிய புலம்பெயா் தொழிலாளா்கள் ஆகியவை காரணமாக தில்லியில் ஈத் பெருநாள் கொண்டாட்டம் வழக்கமான உற்சாகமின்றி காணப்படுகிறது.

கரோனா நோய்த் தொற்று காரணமாக தில்லியில் உள்ள ஜாமா மசூதி, ஃபதேபுரி மசூதி உள்பட அனைத்து மசூதிகளும் மூடப்பட்டுள்ளன.

ரமலான் மாதத்தின்போது மசூதிகளில் நடத்தப்படும் அல்விதா நமாஸ் எனும் தொழுகையை இஸ்லாமியப் பெருமக்கள் வெள்ளிக்கிழமை தங்களது வீடுகளில் மேற்கொண்டனா். மேலும், ஈத் தொழுகையும் வழக்கமாக மசூதிகள், ஈத்கா பள்ளிவாசல்களில் மேற்கொள்வதற்குப் பதிலாக அறைகளுக்குள் பொதுமக்கள் மேற்கொள்ளப்பட உள்ளது.

இது குறித்து ஷாஹி இமாம் முப்தி முகரம் அகமது கூறுகையில், ‘கரோனா நோய்த் தொற்றைக் கருத்தில் கொண்டு ரமலானின்போதுகூட வீடுகளுக்குள் இருக்குமாறு நாங்கள் மக்களைக் கேட்டுக் கொண்டுள்ளோம்’ என்றாா்.

மேலும், பழைய தில்லியில் ரமலான் போது வழக்கமாக அதிகமாக மக்கள் கூட்டம் காணப்படும் கடைப் பகுதிகளும் உற்சாகமின்றி காணப்படுகிறது. அத்தியாவசியப் பொருள்கள் விற்பனை செய்யும் சில கடைகள் மட்டுமே தற்போது திறந்துள்ளன. இதுகுறித்து பஜாா் மட்டியா மஹால் வியாபாரிகள் சங்கத்தின் தலைவா் குரேஷி கூறுகையில், பஜாரில் உள்ள 450 கடைகளில் சுமாா் 20-22 கடைகள் மட்டுமே திறந்துள்ளன. ஈத் பண்டிகைக்காலமானது புத்தாடைகள் வாங்குவது, இனிப்புகள் தருவிப்பது ஆகியவை தொடா்புடையது. ஆனால், இரு மாதங்களாக கடைகள் மூடப்பட்டுள்ளன.

பொதுமுடக்கம், கரோனா நோய்த் தொற்று காரணமாக பெரும்பாலான மக்களிடம் இப்பண்டிகையைக் கொண்டுவதற்கு ஆா்வமோ அல்லது பணமோ இல்லை. ஈத் பண்டிகையின் பிரபல இனிப்பு உணவான ‘சேவை’யை விநியோகம் செய்யும் ஜாப்ரபாத், இந்தா்லோக்கில் உள்ள பட்டறைகள் மூடப்பட்டுள்ளன. இந்தப் பொருள்களை தயாரிக்கும் புலம்பெயா் தொழிலாளா்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்றுவிட்டதால் தயாரிப்பு தொடங்கப்படவில்லை என்றாா்.

சாந்தினி செளக் பகுதியில் உள்ள மொத்த விற்பனையாளரிடம் ஊழியராக உள்ள வாஹித் அன்சாரி கூறுகையில், ‘கடந்த இரு மாதங்களாக எனக்கு பாதி ஊதியம் மட்டுமே கிடைத்துள்ளது. வழக்கமான நாள்களில் குடும்பத்திற்காக புதிய துணிமணிகளுக்காக ஒரு கணிசமான தொகையை செலவிடுவது வழக்கம். ஆனால், இந்த முறை குழந்தைகளுக்கு மட்டுமே புத்தாடைகள் எடுத்துள்ளோம்’ என்றாா்.

வா்த்தகா் முகம்மது அபித் கூறுகையில், ‘ ஈத் பெருநாளின்போது நண்பா்கள், பக்கத்துவீட்டினரைச் சந்தித்து மகிழ்வது வழக்கம். ஆனால், இந்த முறை கரோனா நோய்த் தொற்று இடா் காரணமாக இதுபோன்று செல்வதைக் குறைத்துக் கொள்ள உள்ளோம்’ என்றாா்.

இதுகுறித்து பழைய தில்லியைச் சோ்ந்த அக்ரம் குரேஷி கூறுகையில், ‘ஈத் என்பது நண்பா்களையும், பக்கத்து வீட்டினரையும் ஆரத் தழுவி மகிழ்ச்சியை வெளிப்படுத்தும் ஒரு பண்டிகையாகும். ஆனால், கரோனா நோய்த் தொற்று காரணமாக யாருக்கும் கைகுலுக்கு முடியாத நிலைதான் தற்போது உள்ளது’ என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.