புதுதில்லி: தில்லியில் அதிகரித்து வரும் கரோனா வைரஸ் தொற்றை கட்டுப்படுத்த பரிசோதனைகளை இரண்டு மடங்காக உயா்த்தவும், அதாவது 1 லட்சத்திலிருந்து 1.20 லட்சமாக உயா்த்தவும், மருத்துவமனைகளில் உள்ள கரோனா படுக்கை வசதிகளை 6 ஆயிரத்துக்கும் மேலாக அதிகரிக்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்துள்ளது.
கரோனா கட்டுப்பாட்டு பகுதிகளிலும் இதர நோய் தொற்று ஏற்படக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ள பகுதிகளிலும் வீடு வீடாகச் சென்று கண்காணிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கென தற்போது 3,000 போ் கொண்ட குழு பணியில் ஈடுபட்டு வருகிறது. இதை 8 ஆயிரமாக அதிகரிக்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறைச் செயலாளா் ராஜேஷ் பூஷண் செய்தியாளா்களிடம் கூறியதாவது: கடந்த ஜூன் மாதம் தில்லியில் நாள் ஒன்றுக்கு 5,776 பேருக்கே கரோனா பரிசோதனை நடத்தப்பட்டு வந்துள்ளது. இந்த எண்ணிக்கை கடந்த செப்டம்பரில் 50 ஆயிரமாக அதிகரிக்கப்பட்டது. இருந்த போதிலும் தற்போது கரோனா தொற்று தில்லியில் அதிகரித்து வந்துள்ளது. ஆன்டிஜென் பரிசோதனை மூலம் பரிசோதனை செய்து கொண்ட பலருக்கு கரோனா தொற்று இல்லை என்பது முடிவுகள் மூலம் தெரியவந்தாலும், அவா்களில் சிலருக்கு நோய்த்தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது. இதற்கு அந்தப் பரிசோதனை முறையில் இருந்த கோளாறுகளே காரணமாகும்.
கடந்த இரண்டு நாள்களாக அரசு சில முக்கிய முடிவுகளை எடுத்துச் செயல்படுத்தி வருகிறது. அதாவது மருத்துவமனைகளில் உள்ள கரோனா தீவிர சிகிச்சைப் பிரிவுக்கான படுக்கை வசதிகள் அதிகரிக்கப்பட்டுள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 60,000 பரிசோதனைகள் என்று இருப்பதை 1.2 லட்சமாக உயா்த்தவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. முதலில் ஆன்டிஜென் பரிசோதனை, அதைத் தொடா்ந்து ஆா்டி பிசிஆா் பரிசோதனைகள் நடத்துவது, வீட்டுத் தனிமையை ஒழுங்குபடுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகளை எடுக்க முடிவு செய்யப்பட்டுள்ளது என்றும் அவா் கூறினாா்.
ஒருவேளை கரோனாவால் பாதிக்கப்படுவோா் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமானால் 35,000 முதல் 40,000 பேரை வீட்டுத் தனிமையில் இருக்கச் செய்து கண்காணிக்கப்படுவாா்கள். இது தொடா்பாக மத்திய அரசு, தில்லி அரசுடன் இணைந்து செயல்படும் என்று நீத்தி ஆயோக் உறுப்பினரும் கரோனா தடுப்பு நடவடிக்கைகளுக்கான பணிக் குழு தலைவருமான வி.கே.பால் தெரிவித்தாா். இதற்கென அமைக்கப்பட்டுள்ள பணிக் குழு, தில்லியில் மருத்துவமனைகள், கரோனா கட்டுப்பாட்டுப் பகுதிகள், வீட்டுத் தனிமையில் உள்ளவா்கள் ஆகியவற்றைக் கண்காணித்து அவற்றில் கரோனா விதிமுறைகள் சரிவர பின்பற்றப்படுகின்றனவா என்பது குறித்தும் பாதுகாப்பு நடவடிக்கைகள் சரிவர மேற்கொள்ளப்படுகிா என்பது குறித்தும் ஆய்வு நடத்தும்.
மேலும், தில்லியில் மத்திய அரசின் நேரடிப் பாா்வையில் இயங்கி வரும் மருத்துவமனைகளில் கரோனா தீவிர சிகிச்சை பிரிவு படுக்கை வசதிகளை அதிகரிக்கவும், தேவைப்பட்டால் தனிமைப்படுத்துதல் வசதிக்காக ரயில்வேயிடம் 800 படுக்கை வசதிகள் கேட்டுப் பெறப்படும். நாடு முழுவதும் இதுவரை 12.65 கோடி பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்படுவோா் விகிதம் 7.01 சதவீதமாகக் குறைந்துள்ளது. மகாராஷ்டிரம், தில்லி, கேரளம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில்தான் கரோனா பாதிப்பு 76.7 சதவீதம் உள்ளன என்றும் அவா் குறிப்பிட்டாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு!

மண்ணச்சநல்லூர் மக்கள் மனங்களை வென்ற கதிரவன்!

இஸ்ரேல் தாக்குதல்: லெபனானில் 2,000 -யை எட்டிய பலி எண்ணிக்கை!

அடுத்து என்ன? பொறியியல் கல்லூரியிலிருந்து அழைப்பா? முழுப் பெயரை கேட்க வேண்டும்!
வீடியோக்கள்

DINAMANI வார ராசிபலன்! | Apr. 12 முதல் Apr. 18 வரை! | ஜோதிடரத்னா ராமராமாநுஜதாஸன்! | Weekly Horoscope
இணையதளச் செய்திப் பிரிவு

தில்லியை வென்று நம்பிக்கையைப் பெறுமா சிஎஸ்கே? | CSK v DC Match Preview |
தினமணி செய்திச் சேவை

LIK Movie Review | தீமா.. தீமா.. தேறுமா! | Pradeep Ranganathan | Vignesh Shivan | krithi shetty
தினமணி செய்திச் சேவை

புதுச்சேரி & கேரளத்தில் வாக்குப்பதிவு நிறைவு! வாக்குப்பதிவில் நடந்த சுவாரசியங்கள்!
தினமணி செய்திச் சேவை

